Asianet News TamilAsianet News Tamil

கோவில் சுவர்களில் சிவப்பு வெள்ளை வர்ணம் பூசுவது ஏன்?

ஆலயம் செல்வதன் மூலம் தனிமனித ஒழுக்கமும் பேணப்படும் என்பதால் அடிக்கடி கோயிலுக்குச் செல்லும் ஆன்மீகப் பழக்கம் மிக முக்கியப் பண்பாகக் கருதப்படுகிறது.  அதேபோன்று நம் முன்னோர்கள் உருவாகிய ஒவ்வொன்றிற்கும் பின்னால் காரணங்கள் இருக்கின்றன. பொதுவாக நீங்கள் இந்து கோவில்களுக்கு செல்லும் போது கோவில் சுவரில் வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணங்களில் கோடுகள் பூசப் பட்டிருக்கும். பார்த்திருப்பீர்கள். ஏன் இப்படி வெள்ளை நிற சுவரில் செங்கல் காவிநிறத்தில் பட்டை தீட்டுகிறார்கள்.

எத்தனை முறை கோவிலுக்கு போயிருப்போம் ஒருமுறையாவது, கோவில் சுவர்களில் சிகப்பு வெள்ளை வர்ணம் பூசுவது ஏன்? என்று யோசித்து பார்த்திருக்கிறோமா.?  இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்வோம்.

Why is the temple walls painted red and white?
Author
First Published Sep 28, 2022, 6:33 PM IST

ஆலயம் செல்வதன் மூலம் தனிமனித ஒழுக்கமும் பேணப்படும் என்பதால் அடிக்கடி கோயிலுக்குச் செல்லும் ஆன்மீகப் பழக்கம் மிக முக்கியப் பண்பாகக் கருதப்படுகிறது.  அதேபோன்று நம் முன்னோர்கள் உருவாகிய ஒவ்வொன்றிற்கும் பின்னால் காரணங்கள் இருக்கின்றன. பொதுவாக நீங்கள் இந்து கோவில்களுக்கு செல்லும் போது கோவில் சுவரில் வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணங்களில் கோடுகள் பூசப் பட்டிருக்கும். பார்த்திருப்பீர்கள். ஏன் இப்படி வெள்ளை நிற சுவரில் செங்கல் காவிநிறத்தில் பட்டை தீட்டுகிறார்கள்.

எத்தனை முறை கோவிலுக்கு போயிருப்போம் ஒருமுறையாவது, கோவில் சுவர்களில் சிகப்பு வெள்ளை வர்ணம் பூசுவது ஏன்? என்று யோசித்து பார்த்திருக்கிறோமா.?  இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்வோம்.

ஒவ்வொரு மனிதன் உடம்பிலும் இரத்தத்தில் வெள்ளை அணுக்கள், சிவப்பு இரத்த அணுக்கள் இருக்கும்.

சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை நம் உடலின் எல்லா பாகங்களுக்கும் கொண்டு செல்கிறது. வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை நமக்கு அளிக்கிறது.இவ்விரண்டு அணுக்களும் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதது. இதை குறிக்க தான் வெள்ளை மற்றும் சிகப்பு நிறங்களில் கோவில்களில் சுவர்களில் பூசப்பட்டிருகின்றது . 

ஆண்களின் விந்து வெள்ளை நிறமுடையது, பெண்களின் கருப்பை சிகப்பு நிறத்தில் இருக்கும். இவை இரண்டும் சேர்ந்து தான் இங்கே உயிர் உண்டாகிறது. இதனையும் கோவில் சுவர் குறிப்பால் உணர்த்துகிறது.மனதில் உடலில் உயிர் உண்டாவதை போல இறைவனின் ஆன்மா மூல ஸ்தானத்தில் இருக்கும். அதனால் தான் அதை கருவறை என்று கூறுகிறார்கள்.சுவர்களில் உள்ள வர்ணங்கள் இவைகளை சான்றாக வைத்தும் நமக்கு வாழ்வியலையும் கூடவே சேர்த்து உணர்த்துகின்றன.இது மட்டுமல்ல கோவில் வாசல்படியை தொட்டும் கும்பிடுவதற்கு பின்னாலும், அறிவியல் உண்மைகள் இருக்கின்றன.

கோவில் வாசல்படியை குனிந்து தொடும் பொழுது நமக்குள் ஒரு பணிவை ஏற்படுத்துகிறது. பிறகு உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது.படிக்கட்டை தொட்ட பிறகு, நம் நெற்றியில் விரல்களை வைத்து அழுத்த வேண்டும். அப்போது நம்மிடம் மறைந்துள்ள தீய சக்திகள் விலகி தெய்வ சந்நிதியில் இருந்து சில அதிர்வலைகளை நம்மிடம் உண்டாகும்.

முருகப்பெருமானின் சிலையை பெண் வடிவில் கண்டிருக்கிறீர்களா?

இப்படியான பல வியப்புகள் கோவிலில் இருப்பதனால் தான், பலரும் தங்களை அறியாமலேயே ஆன்மீகத்தில் மூழ்கி விடுகின்றனர். நம்மை புது மனிதனாக்கி புத்துணர்ச்சியோடு கோவிலுக்குள் செல்ல வைக்கும் அறிவியல் சூட்சமங்கள் இவை. இனி கோவிலுக்கு செல்லும் போது  இதையெல்லாம் கவனியுங்க.. 

Follow Us:
Download App:
  • android
  • ios