Asianet News TamilAsianet News Tamil

தை அமாவாசை 2024: இந்த 3 பேருக்கு மட்டும் தானம் கொடுங்க... மகத்தான ஆசீர்வாதங்கள் கிடைக்கும்!!

இந்த ஆண்டு தை அமாவாசை அன்று உங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டால் குறிப்பிட்ட 3 பேருக்கு மட்டும் தானம் வழங்கலாம்.

thai amavasya 2024 donate to these 3 peoples will bring immense blessings in tamil mks
Author
First Published Feb 8, 2024, 10:38 AM IST

தை அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து வழிபடுவதற்கு உரிய நாளாகும். இந்நிலையில், இந்தாண்டு வரும் தை அமாவாசை மிகவும் விசேஷமானது என்று சொல்லலாம். ஏனெனில், இந்த தை அமாவாசையானது வெள்ளிக்கிழமையில் வருகிறது, அதுவும் பெருமாளுக்குரிய திருவோணம் நட்சத்திரத்துடன் இணைந்து வருவது தான் மிகவும் சிறப்பு. 

இதனால் இந்த ஆண்டு தை அமாவாசையானது ஒரு அரிதான அமாவாசை என்றே சொல்லலாம். மேலும், தை அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து தானம், தர்மங்கள் செய்யலாம். முக்கியமாக, 
இந்நாளில், விரதம் இருந்து புனித நீராடினால் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.

தை அமாவாசை 2024 தேதி, நேரம் :
இந்த ஆண்டு தை அமாவாசையானது பிப்ரவரி 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை  அதாவது நாளை வருகிறது. 

திதி கொடுக்க உகந்த நேரம் : நாளை காலை 7.53 முதல் மறுநாள் அதாவது பிப்ரவரி 10ஆம் தேதி காலை 4.34 வரை அமாவாசை திதி கொடுக்கலாம்.

 புனித நீராடுவதற்கு உகந்த நேரம் : காலை 8 முதல் 11 மணி வரை

தர்ப்பணம் கொடுப்பதற்கு உகந்த நேரம் : காலை 9 முதல் 10.20 வரை

பித்ருக்களின் சாபம்:
பொதுவாகவே, ஒவ்வொரு அமாவாசை  அன்றும் நம்முடைய முன்னோர்கள் நம்மை பார்ப்பதற்காக வீடு தேடி வருவார்கலாம். அதிலும் முக்கியமாக  தை மற்றும் ஆடி அமாவாசை அன்று மிகவும் சிறப்பான நாட்களில் வரும் வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டினை முறையாக செய்ய வேண்டும். ஒருவேளை அப்படி செய்ய தவறினால்  அது அவர்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும். இதனால் நமக்கு பித்ருதோஷம் ஏற்படும் மற்றும் பித்ரு சாபமும் கிடைக்கும்.

பித்ரு தோஷம் மற்றும் பித்ரு சாபம் இருக்கும் ஒரு குடும்பத்தில் சுப காரியங்கள் ஏதும் நடக்காது. உதாரணமாக, திருமணம் தள்ளிப்போவது, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, தீராத நோய், கடன் பிரச்சினைகள், குடும்பத்தில் சந்தோஷம் இல்லாமல் இருப்பது என இப்படி சொல்லிக்கொண்டே போகும் அளவிற்கு பிரச்சனைகள் ஏற்படும்.  எனவே, நீங்கள் அமாவாசை நாளில் உங்கள் முன்னோர்களை நினைத்து வழிபட மறந்தால் இந்த ஆண்டு தை அமாவாசை அன்று கண்டிப்பாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, படையல் இட்டு, அவர்களை நினைத்து தானம் செய்யுங்கள். இப்படி செய்தால் பித்ரு தோஷம் மற்றும் பித்ரு சாபம் நீங்கும். குறிப்பாக உங்களின் அனைத்து பிரச்சினைகளும் நீங்கும்.

ஒருவேளை உங்களால் இந்த ஆண்டு தை அமாவாசை அன்று உங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டால் குறிப்பிட்ட 3 பேருக்கு மட்டும் தானம் வழங்கலாம். அப்படி செய்தால், உங்கள் முன்னோர்கள் நீங்கள்  செய்யும் வழிபாட்டினை ஏற்று, உங்களுக்கு ஆசி வழங்குவார்கள். 

தானம் கொடுக்க வேண்டிய 3 பேர் யார்?
முதல் தானம் காகத்திற்கு கொடுக்க வேண்டும். எனவே, காகத்திற்கு எள் கலந்த சாதம் கொடுக்க வேண்டும்.. காகம் சாப்பிட்ட பிறகுதான் நீங்கள் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இரண்டாவது தானம் பசு மாட்டிற்கு கொடுக்க வேண்டும். கோதுமை தவிடு அல்லது ஏதாவது தவிடு வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். 

மூன்றாவதாக தானம் மீன்களுக்கு கொடுக்க வேண்டும். குளத்தில் இருக்கும் மீன்களுக்கு ஒரு கைப்பிடி அளவு பொரியை  தானமாக போட வேண்டும். இப்படி இந்த 3 உயிரினங்களுக்கு தை அமாவாசை அன்று தானம் கொடுத்தால் மகத்தான ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios