Asianet News TamilAsianet News Tamil

சனிக்கிழமை காலையில் இந்த விஷயங்களைப் பார்த்தால் நல்ல சகுணம்... விரைவில் அதிர்ஷ்டம் வரும் என்று அர்த்தம்

சனிக்கிழமை காலையில் இந்த விஷயங்களைப் பார்ப்பது அதிர்ஷ்டத்தின் அறிகுறி என்று கருதப்படுகிறது.

Seeing these things on Saturday morning is a sign of good luck..good things will happen soon
Author
First Published Jul 1, 2023, 11:22 AM IST

சனிக்கிழமை சனி பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். பொதுவாக சனி இயற்கையில் மிகவும் ஆக்ரோஷமானவர் என்று கூறப்படுகிறது, ஆனால் உண்மையில் அப்படி இல்லை. உண்மையில், சனி நீதியின் கடவுள், அவர் மக்களுக்கு செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு வெகுமதி அளிக்கிறார். அந்த வகையில் ஒரு நபரின் செயல்களுக்கு ஏற்ப அவர்களை தண்டிப்பதுடன், தேவைப்படும் போது அருள் செய்கிறார்கள்.

ஒவ்வொரு நபரும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் சனி சடேசாதி, மஹாதசா மற்றும் தையா போன்றவற்றைக் கடக்க வேண்டும் என்று கூறப்படுகிறது, ஆனால் உங்கள் கர்மாக்கள் நன்றாக இருந்தால், இந்த நிலைகளில் கூட நீங்கள் எந்த பிரச்சனையையும் சந்திக்க மாட்டீர்கள். எனவே நல்ல செயல்களை மட்டும் செய்யுங்கள். சனி பகவான் ஒருவரின் கர்மாவில் மகிழ்ச்சி அடைந்தால், அவருக்கு சனி பகவானின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதிர்ஷ்டம் அவரை தேடி வரும் என்று கூறப்படுகிறது. எனவே சனிக்கிழமை காலையில் இந்த விஷயங்களைப் பார்ப்பது அதிர்ஷ்டத்தின் அறிகுறியாகும், நல்ல நாட்கள் விரைவில் வரும் என்று கூறப்படுகிறது. 

பிச்சைக்காரன்

ஏழைகளுக்கு உதவுவது சனி பகவானை மகிழ்விக்கிறது. சனிக்கிழமை காலை ஒரு பிச்சைக்காரன் உங்கள் வீட்டு வாசலுக்கு வந்தால், அவரை ஒருபோதும் செய்து விரட்ட வேண்டாம். இது மிகவும் மங்களகரமானதாகவும், சனி பகவானின் அருளின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் உங்கள் வசதிக்கு ஏற்ப அவருக்கு தானம் செய்யலாம். இதனால் சனி பகவான் மிகுந்த மகிழ்ச்சி அடைவார் என்றும் இதனால் நல்ல விஷயங்கள் விரைவில் நடக்கும்.

துப்புரவாளர்

நீங்கள் காலையில் ஏதாவது வேலை செய்ய வெளியே சென்றால், திடீரென்று ஒரு துப்புரவாளர் சாலையை சுத்தம் செய்வதை கண்டால், அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அத்தகைய சந்தர்ப்பத்தில், நிச்சயமாக அந்த நபருக்கு ஏதாவது உதவி செய்யுங்கள். சனிபகவானின் ஆசி உங்களுக்கு கிடிஅக்கும் என்று அர்த்தம். உங்கள் பணியில் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

கருப்பு நாய்

சனிக்கிழமை காலை தெருவில் ஒரு கருப்பு நாயைப் பார்ப்பதும் நல்ல சகுணமாக கருதப்படுகிறது. கருப்பு நாய் சனி பகவானின் வாகனமாக கருதப்படுகிறது. அந்த நேரத்தில் பால், ரொட்டி, கடுகு எண்ணெய் பராத்தா, ரொட்டி போன்றவற்றை கருப்பு நாய்க்கு கொடுங்கள். இது சனி பகவானை மிகவும் மகிழ்க்கும் என்றும், மற்றும் சனி பகவானின் ஆசி உங்களுக்கு கிடைக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios