Asianet News TamilAsianet News Tamil

திருப்பதி சென்றால் திருப்பம் வருவது உண்மையா?

திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் வரும் என்று எண்ணி பலரும் திருப்பதிக்கு சென்று அங்குள்ள பெருமாளை தரிசித்து வருகின்றனர். அப்படி தரிசிக்கும் வேலையில் நம் வேண்டுதலுக்கிணங்க இறைவன் செவி சாய்கிறாரா இல்லையா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். 
 

Is it true that if you go to Tirupati, you will get a turning point?
Author
First Published Sep 14, 2022, 3:40 PM IST

திருப்பதி அருகிலுள்ள மங்காபுரம் கிராமத்தில் கணவனை இழந்த மூதாட்டி கங்கம்மா சுண்டல் விற்றுக்கொண்டு இருந்தாள். அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் தான் தனது வாழ்க்கையை நடத்தி வந்தாள். “ஏண்டா பிறந்தோம்” என அடிக்கடி புலம்பிக் கொண்டே இருப்பாள் அந்த மூதாட்டி.

அந்தக்காலத்தில், திருமலைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக காட்டுப்பாதையில் நடந்து தான் செல்வார்கள். அப்படி ஒருநாள் அதிகாலைப் பொழுதில் பக்தர்கள் கூட்டமாக மலையேறிக் கொண்டிருந்த போது, மலை அடிவாரத்தில் இருந்த பாட்டி, மலையேறுபவர்களிடம் சென்று, “ஐயா! நீங்க எல்லாரும் எதற்காக மலைக்கு செல்கிறீர்கள்?” என்று ஒன்றும் அறியாதவளாய்க் கேட்டாள். அவளுடைய அப்பாவித்தனமான கேள்வியைக் கேட்டதும் அவர்கள் சிரித்து கொண்டே..  “என்ன பாட்டி கேள்வி இது? திருமலையின் அடிவாரத்தில் இப்படியும் ஒருத்தியாய் இருக்கியே! மேலே பெருமாள் கோயில் இருப்பது திருப்பதிகாரியான உனக்கே தெரியாதா?” என்று கோபித்துக் கொண்டனர். 

ஆனால் உண்மையில், மலையில் கோயில் இருப்பதைக் கூட அறியாமல் தான் அந்த மூதாட்டி இருந்தாள். அப்போது ஒரு பக்தர் மட்டும் அவள் மீது இரக்கம் கொண்டு, “அம்மா! மலை மேல் ஒரு சுவாமி உள்ளார். அவனை சென்று தரிசித்தால், இனிமேல் இப்படி பிறந்து சுண்டல் விற்கும் நிலையே இருக்காது. அவனை “கோவிந்தா” எனச் சொல்லி கும்பிட வேண்டும். அப்படி செய்து வந்தால் நீ செய்த பாவங்களெல்லாம் தீர்ந்து விடும், என மூதாட்டிக்கு புரியும் வகையில் எளிமையாக எடுத்துச் சொன்னார்.

இந்த பக்தர் கூறியதை கேட்டாளோ.. இல்லையோ! ஆனால் விறுவிறுவென சுண்டல் கூடையோடு திருமலைக்கு ஏறினாள். ஏழுமலையப்பனைக் கண்குளிரக் கண்டு, “அப்பனே! கோவிந்தா, உன்னை வணங்கினால் இனி பிறக்கவே மாட்டேனாமே! அந்த பக்தர் தெரிவித்தார்! எனக்கும் இனி பிறவி வேண்டாமையா” என்று மனம் உருகிச் சொன்னாள். அப்போது தரிசிக்க வந்த பக்தர்கள் மலையை விட்டுக் கிளம்பினார்கள். ஆனால் மூதாட்டி மட்டும் அங்கேயே தங்கிவிட்டாள். 

அந்த சமயத்தில் தான், ஒரு வயோதிகர் அங்கு வந்தார். “அம்மா! சுண்டல் கொடு” என கேட்க, அவளும் கொடுக்க, சாப்பிட்டு விட்டு நடையைக் கட்டினார். உடனே மூதாட்டி ”ஐயா! சுண்டலுக்கு காசு கொடுத்துட்டு போங்க,” என்றாள். அதற்கு அந்த வயோதிகர் ”அம்மா! நான் ஒரு கடன்காரன், கல்யாணத்துக்குக் கடன் வாங்கிவிட்டு, வருமானத்தையெல்லாம் வட்டியாகக் கட்டிவிட்டு கஷ்டப்படுகிறேன். சுண்டலுக்கு கூட பணமில்லை. நாளை இங்கே வருவேன். அப்போது காசு தருகிறேனே!” என கெஞ்சலாக கூறினார். “சரி, நாளை கொண்டு வாங்க,” என விட்டுவிட்டாள் மூதாட்டி. 

ஆனால் பாவம்.. தன் முன்னால் வந்து நின்றது உலகிற்கே படியளக்கும் ஏழுமலையான் என்பதைப் பாமரப் பெண்ணான கங்கம்மா எப்படி அறிவாள்! மறுநாள், சொன்னபடி அந்த வயோதிகர் வரவில்லை என்றதும்.. “இப்படி ஏமாற்றி விட்டாரே கிழவர்” என அவள் பொருமிக் கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் அவள் இறந்தும் போய்விட்டாள். ஆனால் பாட்டிக்கு பணத்துக்கு பதிலாக, மேலான வைகுண்டத்தையே கொடுத்து விட்டார் பரந்தாமன். 

ஆனாலும், அவர் மானிடப் பிறப்பெடுத்து சீனிவாசனாக பூமிக்கு வந்து, பாட்டிக்கு மறுநாள் காசு கொடுப்பதாக வாக்களித்து விட்டு, கொடுக்கவில்லையே! என்ற வருத்தத்துடன் இருந்தார். இதனால் தெற்குமாடவீதியிலுள்ள அசுவ சாலையில், இப்போதும் விழாக்காலங்களில் அவர் பவனியாக வரும் போது, பாட்டிக்கு பயந்து கொண்டு மேளதாளம் இல்லாமல் ஒளிந்து கொண்டு செல்கிறார்.

மாதவிலக்கு நேரங்களில் பெண்கள் கோவிலுக்கு செல்ல கூடாது..காரணம் இதுதான்!

திருப்பதி சென்று வந்தாலே திருப்பம் கிடைக்கும் என்று சும்மாவா சொன்னார்கள் முன்னோர்கள்.  நேரம் கிடைக்கும் போது திருமலையானை தரிசியுங்கள் வாழ்வில் வரும் திருப்பம் நல்ல பலனை அளிக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios