Thiruchendur Sri Subramanya Swamy Temple : தமிழ் கடவுள் என்றாலே அது முருகன் தான் என்பது நம் அனைவருக்கும் தெரியும் அவருக்கு மிகச் சிறப்பான கோயில் அறுபடை வீடு என்றும் அனைவருக்கும் தெரியும்.

அறுபடை வீட்டின் அதிபதி: 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ் கடவுள் என்றாலே அது முருகன் தான் என்பது நம் அனைவருக்கும் தெரியும் அவருக்கு மிகச் சிறப்பான கோயில் அறுபடை வீடு என்றும் அனைவருக்கும் தெரியும். இந்த அறுபடை வீட்டுக்கு சொந்தக்காரரும் முருகன் தான். முருகன் என்றாலே குன்றியிருக் இடமெல்லாம் இந்த குமரன் இருப்பான். என்ற பழமொழிக்கு ஏற்ப முருகன் மழையிலேயே அமர்ந்திருக்கிறார். அப்பன் சிவ னை விட அதிக அளவில் முருகற்கு பக்தர்கள் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. முருகனின் அறுபடை வீடுகளும் மனித உடலில் உள்ள ஆறு சக்கரங்களை குறிப்பதாகும்.

இரண்டாவது படை வீடு -திருச்செந்தூர்: 

முருகப்பெருமானின் இரண்டாவது படை வீடு திருச்செந்தூர் சூரபத்மனை வென்று கோயிலில் முருகப்பெருமான் ஜெயந்திநாதர் என்றும் அழைக்கப்படுகிறார் அதுவே பின்னால் மறுவி செந்தில்நாதன் என்றும் கூறப்பட்டது அதன் பிறகு திருச்செந்தூர் என்று சொல்லப்பட்டது முருகன் சிவந்த நிறமேனியை உடையவர் என்பதால் செந்தில் என்ற பெயர் வந்ததாகவும் சிவந்த நிற தெய்வமான முருகன் வசிக்கும் ஊர் என்பதால் இரு திருச்செந்தூர் என்றும் பெயர் வந்தது. பலன்கள்: இங்கு முருகன் சூரபத்மனை அளித்ததால் இக்கோயில் நம்மில் இருக்கும் பகையை அளிக்கும் திருத்தலமாகும் விளங்குகிறது மனதில் இருக்கும் பயமும் நீங்கி தைரியம் பிறக்கும் என்றும் கூறப்படுகிறது.