Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவை விட மோசமான நச்சுக்கிருமிகள்... மிகவும் ஆபத்தானவர்கள்... கொந்தளிக்கும் ராமதாஸ்..!

 சமுதாயத்தில் நஞ்சை பரப்புபவர்கள். அவர்களிடமிருந்து நமது பிள்ளைகளைக் காப்பதும், விழிப்புணர்வூட்டுவதும்  தான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்!

Worse germs than corona ... more dangerous ... turbulent Ramadoss
Author
Tamil Nadu, First Published Jul 17, 2020, 11:38 AM IST

கொள்கை அடிப்படையில் எதிர்க்க துணிவில்லாத கொரோனாவை விட மோசமான இந்த நச்சுக்கிருமிகள் மிகவும் ஆபத்தானவர்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் கொந்தளித்துள்ளார்.

பெரியார் சிலைமீது காவி சாயம் பூசியதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள அவர், ‘’கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலை மீது சில நச்சுக்கிருமிகள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமான விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!Worse germs than corona ... more dangerous ... turbulent Ramadoss

கொள்கை அடிப்படையில் எதிர்க்க துணிவில்லாத கொரோனாவை விட மோசமான இந்த நச்சுக்கிருமிகள் மிகவும் ஆபத்தானவர்கள்;  சமுதாயத்தில் நஞ்சை பரப்புபவர்கள். அவர்களிடமிருந்து நமது பிள்ளைகளைக் காப்பதும், விழிப்புணர்வூட்டுவதும்  தான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்!Worse germs than corona ... more dangerous ... turbulent Ramadoss

கொள்கை அடிப்படையில் எதிர்க்க முடியாத ஒருவரின் சிலையை அவமதிப்பதும்,  சாயத்தை ஊற்றுவதும் கோழைத்தனமான செயல்கள். கடந்த காலங்களில் இத்தகைய செயல்களால் எதையும் சாதிக்க முடியவில்லை; இனியும் சாதிக்க முடியாது என்பதை கோழைகள் உணர வேண்டும்’’எனத் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios