Asianet News TamilAsianet News Tamil

குழந்தை பிறந்த ஒரே நாளில் பெண் போலீஸ் உயிரிழப்பு.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்..

முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என அடுத்தடுத்து தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. ஏழை, பணக்காரன் என எந்த பாகுபாடுமின்றி தாக்கும் இந்த வைரசால் இதயத்தை நொறுங்கடிக்கும் துயர சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. 

Women police Died  after a day of delivery .. heart breaking tragedy ..
Author
Chennai, First Published Aug 5, 2021, 11:48 AM IST

குழந்தையை பெற்றெடுத்த ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பெண் காவலர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது. கொரோனா வைரஸ் என்ற கொடிய அரக்கன் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இந்த வைரஸ் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொத்துக் கொத்தாக மக்கள்  மடிந்து வருகின்றனர். இந்த வைரஸ் தாக்கத் தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும்  வீரியம் குறையாமல் தாக்கி வருகிறது. 

Women police Died  after a day of delivery .. heart breaking tragedy ..Women police Died  after a day of delivery .. heart breaking tragedy ..

முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என அடுத்தடுத்து தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. ஏழை, பணக்காரன் என எந்த பாகுபாடுமின்றி தாக்கும் இந்த வைரசால் இதயத்தை நொறுங்கடிக்கும் துயர சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில், குழந்தையை ஈன்றெடுத்த ஒரே நாளில் அதன் தாய் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் வசந்தா(47) இவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். வசந்தா கர்ப்பமாக இருந்து வந்ததால், அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பரிசோதனை மேற்கொண்டு வந்தார். அவருக்கு பேறுகாலம் நெருங்கியதை அடுத்து.

Women police Died  after a day of delivery .. heart breaking tragedy ..Women police Died  after a day of delivery .. heart breaking tragedy ..

பிரசவம் மேற்கொள்வதற்காக அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்க்க முடியாது என கூறிவிட்டனர். இதனால் அவர் சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு நேற்று காலை திடீரென வலி ஏற்பட்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் முகத்தை கூட பார்க்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட தாய் வசந்தா கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். திடீரென இன்று காலை 4:15 மணி அளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெற்ற குழந்தையை தொட்டுக்கூட பார்க்க முடியாமல் கொரோனாவுக்கு தாய் உயிரிழந்துள்ள சம்பவம் மருத்துவமனையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios