Asianet News TamilAsianet News Tamil

தாமரை இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி மலராது... ஆளாளுக்கு அதிமுகவை கடுப்பேற்றி வெறுப்பேற்றும் பாஜக..!

மத்தியில் பாஜக தலைமை என்ன கூறுகிறதோ? அதை தமிழக பாஜக செயல்படுத்துகிறது என்பதை அதிமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும் என கேரள மாநில பாஜக பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

Without the lotus, the rule in Tamil Nadu will not flourish...cp radhakrishnan
Author
Tiruppur, First Published Dec 26, 2020, 3:40 PM IST

மத்தியில் பாஜக தலைமை என்ன கூறுகிறதோ? அதை தமிழக பாஜக செயல்படுத்துகிறது என்பதை அதிமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும் என கேரள மாநில பாஜக பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சி.பி.ராதாகிருஷ்ணன்;- பாஜக என்பது தலைவர்களும், தொண்டர்களும் சமமாக நடத்தப்படுகிற இயக்கம். தமிழகத்தில் தாமரை மலருமா என்று கேட்டவர்களுக்கு மத்தியில், தற்போது தாமரை இல்லாமல் ஆட்சி மலருமா என்ற நிலை உருவாகியுள்ளது. பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சிறப்பாக செயல்படுகிறது. இது, வரும் நாட்களிலும் மக்கள் நலனில் அக்கறை உள்ள  இந்த கூட்டணி வெற்றி பெறும்.

Without the lotus, the rule in Tamil Nadu will not flourish...cp radhakrishnan

ஆட்சியில் இருந்தபோது செய்யாததை எல்லாம், ஆட்சியில் இல்லாதபோது திமுகவினர் செய்வார்கள். கிராமங்களில் மக்கள் சபைக் கூட்டங்களை நடத்துவதன் மூலமாக, அவர்களின் நலனை காப்பதுபோல காட்டிக் கொள்கின்றனர். ஆனால், திமுக ஆட்சியில்தான் மக்கள் சபை கூட்டங்கள் நடத்துவது தடுக்கப்பட்டது என்பது மக்களுக்கு தெரியும்.

Without the lotus, the rule in Tamil Nadu will not flourish...cp radhakrishnan

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல்தான் புதிய மாற்றத்தை தரும் என்று கூறியுள்ளார். அவரது இயக்கம் தொடங்கப்பட்டு கொள்கை, திட்டங்களை அறிவித்தபிறகே, எந்த திசையில் பயணிக்க விரும்புகிறார் என்பது புரியும். மத்தியில் பாஜக தலைமை என்ன கூறுகிறதோ? அதை தமிழக பாஜக செயல்படுத்துகிறது என்பதை அதிமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும் என சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios