தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் 14 பேர் சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் 3 பேர் நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியாவிட்டாலும், இடைத்தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கும் என்று தினகரன் நம்பினார். ஆனால், தேர்தலில் அமமுக படுதோல்வியைச் சந்தித்தது.
நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவின் ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதிமுகவிலிருந்து விலகி தினகரனை நம்பி 18 எம்.எல்.ஏ.க்கள் முகாம் மாறினார். அவர்களுடைய எம்.எல்.ஏ. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் 14 பேர் சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் 3 பேர் நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியாவிட்டாலும், இடைத்தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கும் என்று தினகரன் நம்பினார். ஆனால், தேர்தலில் அமமுக படுதோல்வியைச் சந்தித்தது.


தேர்தல் தோல்விக்கு பிறகு சைலண்ட் மோடுக்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள பலர் சென்றுவிட்டார்கள். அவர்கள் அதிமுகவில் இணைவது பற்றி யோசித்துவருவதாகவும் கூறப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளின் அடிப்படையிலும் பங்கேற்காத நிர்வாகிகளின் மனநிலையும் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
