வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் ஏ.சி. சண்முகம் 8,141 ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திடம் தோல்வியடைந்தார். அந்தத் தோல்வியிலிருந்து ஏ.சி. சண்முகம் இன்னும் மீளவே இல்லை. இன்னும்கூட தன்னை காலை வாரிவிட்ட விஷயங்கள் குறித்து அவருடைய நெருங்கிய நண்பர்களிடம் புலம்பிவருவதாக கூறப்படுகிறது.
வேலூரில் மீண்டும் போட்டியிட முடிவு செய்திருக்கிறாராம் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம். அதான். தேர்தல் முடிந்துவிட்டதே என்றுதானே நினைக்குறீங்க. இப்போ, அவர் முடிவு செய்திருப்பது மேயர் தேர்தல் என்கிறார்கள் புநீக கட்சியினர்.

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் ஏ.சி. சண்முகம் 8,141 ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திடம் தோல்வியடைந்தார். அந்தத் தோல்வியிலிருந்து ஏ.சி. சண்முகம் இன்னும் மீளவே இல்லை. இன்னும்கூட தன்னை காலை வாரிவிட்ட விஷயங்கள் குறித்து அவருடைய நெருங்கிய நண்பர்களிடம் புலம்பிவருவதாக கூறப்படுகிறது. வேலூர் தேர்தலில் மிக நெருக்கமாக வந்து தோல்வியடைந்ததால், அவருடைய கட்சியினருக்கு புதிய யோசனை வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.


புநீகட்சியினர் மத்தியில் இந்தப் பேச்சு எழுந்தாலும், மேயர் சீட்டை ஏ.சி.சண்முகத்துக்கு அதிமுக ஒதுக்குமா என்பது தேர்தல் நேரத்தில்தான் தெரியவரும் என்பதே யதார்த்தம்.
