நாம் தமிழர் கட்சியிலிருந்து ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களிடமிருந்து நிதி பெறப்படுகிறது. 

வெளிப்படை தன்மையோடு செயல்படும் என கூறும் நாம் தமிழர் கட்சி இதுவரை கட்சி கணக்கு வழக்குகளை வெளியிடடாதது ஏன் என திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ்காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ்காந்தி முன்னிலையில், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் உட்பட சுமார் 400க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ்காந்தி, நம் தமிழர் கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி தொடர்பான முறையான கணக்கு இல்லை என்றும் ஈழத்தமிழர்களிடமிருந்தும் நிதி பெறப்படுகிறது. மேலும் நாம் தமிழர் கட்சியிலிருந்து ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களிடமிருந்து நிதி பெறப்படுகிறது. வெளிப்படை தன்மையோடு செயல்படும் என கூறும் நாம் தமிழர் கட்சி இதுவரை கட்சி கணக்கு வழக்குகளை வெளியிடடாதது ஏன் என கேள்வியெழுப்பினார். 

சங்கர் படுகொலையில் தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்காத இரண்டு கட்சிகள் நாம் தமிழர் மற்றும் பாஜக தான் என குற்றஞ்சாட்டினார். மேலும், நாம் தமிழர் கட்சியில் சாதி ரீதியில் பொருப்புகள் வழங்கப்படுகின்றன என்றும் கட்சியில் இருக்கும் முன்னனி தலைவர்கள் 19 பேர் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என குற்றஞ்சாட்டினார். சீமான் பேசும் தமிழ் தேசியம் சாதி ரீதியான சமூக நீதி அற்றதாக இருக்கும். அதிமுகவிற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி செயல்படுவதாக ராஜீவ்காந்தி தெரிவித்தார்.