Edappadi: திமுக ஆட்சியை மோடி கவிழ்ப்பார்... அடித்துச் சொல்லும் எடப்பாடி பழனிசாமி..!
கடந்த ஆண்டு எங்கள் ஆட்சியில் வழங்கியது போல் அடுத்த ஆண்டும் பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ .2500 வழங்க வேண்டும்.
அப்படி என்ன துரோகம் செய்துட்டோம்... பாமக சொல்லியே ஆக வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.
சேலத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், ‘’அதிமுகவை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது. மக்களை ஏமாற்றி கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்துள்ளது திமுக. இன்னும் இரண்டரை ஆண்டுகள்தான் திமுக ஆட்சி இருக்கும்.
அதிமுகவினர் மீது போடப்படும் பொய் வழக்குகளை சட்டப்படி சந்திப்போம். வலிமை சிமெண்டாம், நாங்க என்ன வலிமை இல்லாத சிமெண்டா கொடுத்தோம் ?.மத்திய அரசு அறிவித்த படி, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையில் திமுக ஆட்சி முடியும். சேலம் என்று சொன்னால் அது அ.தி.மு.க கோட்டை. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் காலத்திலும் சரி , புரட்சி தலைவி அம்மா அவர்களின் காலத்திலும் சரி, இப்போதும் சரி, சேலம் எப்போதும் அ.தி.மு.க-வின் கோட்டை. அ.தி.மு.க-வை வீழ்த்த எந்த கொம்பனாலும் முடியாது. எங்களை யாராலும் அசைக்க முடியாது. ஏன் ஒரு தொண்டனை கூட தொட்டு பார்க்கமுடியாது.
தி.மு.க அரசு தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் 500-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கினார்கள். ஆனால் இன்று வரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இது தொடர்பாக அ.தி.மு.க பலமுறை குரல் கொடுத்தும் விடியாத அரசு செவி சாய்க்கவில்லை . அவர்களுக்கு எதிராக இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு எங்கள் ஆட்சியில் வழங்கியது போல் அடுத்த ஆண்டும் பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ .2500 வழங்க வேண்டும். தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும்.
அம்மா’ சிமெண்டை-தான் இப்போது விலையை ஏற்றி ‘வலிமை’ சிமெண்ட் என்று கொடுக்கிறார்கள். வலிமை சிமெண்டாம், நாங்க என்ன வலிமை இல்லாத சிமெண்டா கொடுத்தோம் ? ‘அம்மா’ பெயர் இருப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அதிமுகவினர் மீது எத்தனை வழக்கு போட்டாலும் நாங்கள் அஞ்சப்போவதில்லை எதனையும் சட்ட ரீதியாக சந்தித்து வெல்வோம். சென்னை கன மழையால் மிதந்தபோது, முதல்வர் மு.க.ஸ்டாலின் திரைப்படத்தில் வருவதுபோல நடந்தார், போஸ் கொடுத்தார், டீ குடித்தார், பின்னர் போய்விட்டார்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினால் நாங்கள் பயப்படமாட்டோம்; எங்கள் ரத்தத்திலேயே வீரம் ஊறியுள்ளது. அதிமுகவை வீழ்த்த நினைத்தால் வீழ்ந்து போவார்கள்; அழிக்க நினைத்தால் அடையாளம் இல்லாமல் போவார்கள்;
தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு விரைந்து நிறைவேற்றவில்லை எனில் அதனை மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்ல போராட்டங்களை தொடருவோம். அதிமுக மீது அவதூறு பரப்பினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்; எங்களை தொந்தரவு செய்தால் எதையும் சந்திக்க தயார். திமுகவின் எத்தகைய அச்சுறுத்தலுக்கும் அஞ்ச மாட்டோம், ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் மக்கள் பணி தொடரும். அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது,தொண்டனை கூட தொட்டுப்பார்க்க முடியாது; 7 மாதகால திமுக ஆட்சியில் மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர், மக்களை ஏமாற்றி கொள்ளைப் புறத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது திமுக'’ என அவர் தெரிவித்தார்.