Asianet News TamilAsianet News Tamil

நான் என்ன பல்லியா? பாம்பா..? நான் குதித்தால் உனக்கென்ன..? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி..!

ஊர்ந்து செல்ல நான் என்ன பல்லியா? பாம்பா? என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

What do you do if I jump ..? Edappadi retaliates against MK Stalin
Author
Tamil Nadu, First Published Mar 19, 2021, 11:17 AM IST

ஊர்ந்து செல்ல நான் என்ன பல்லியா? பாம்பா? என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.What do you do if I jump ..? Edappadi retaliates against MK Stalin

கடலூர் மாவட்டம், புவனகிரியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “நான் ஊர்ந்து போய் முதல்வராக பல்லியா? பாம்பா? நான் நடந்து சென்றுதான் முதல்வரானேன். விவசாயிகள் கஷ்டத்தை நான் உணர்ந்தவன். வெயில், மழை, இரவு, பகல் என எதையும் பார்க்காமல் ரத்தம் வியர்வை சிந்தி உழைக்கும் ஒரே தொழில் விவசாயம். இதைப்பற்றி ஸ்டாலினுக்கு சிந்திக்க தெரியாது. சிந்தித்தாலும் பேசத் தெரியாது. என் தாத்தா காலத்தில் இருந்து விவசாயம் தான் செய்துகொண்டிருக்கிறோம்.எடப்பாடி விவசாயி, விவசாயி என குதிக்கிறார் என ஸ்டாலின் சொல்லுகிறார். நான் குதித்தால் உனக்கு என்ன?” என கேள்வி எழுப்பினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios