இலங்கையில் தாமரையை மலரவிட மாட்டோம்... பாஜகவுக்கு செக் வைக்கும் சிங்கள தேசம்..!
இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் இலங்கையில் பாஜகவை விரிவுப்படுத்த உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டமிட்டிருப்பதாக திரிபுரா மாநில முதல்வர் பிப்லப் தேவ் தெரிவித்திருந்தார்.
பாஜகவால் இலங்கையில் ஒருபோதும் கால்பதிக்க முடியாது என அந்நாட்டு தேர்தல் ஆணையம் உறுதிபட தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் இலங்கையில் பாஜகவை விரிவுப்படுத்த உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டமிட்டிருப்பதாக திரிபுரா மாநில முதல்வர் பிப்லப் தேவ் தெரிவித்திருந்தார்.
ஆனால் அதற்கு வாய்ப்பில்லை எனக் கூறியுள்ள இலங்கை தேர்தல் ஆணையத் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, எங்கள் நாட்டு சட்டம் அதற்கு அனுமதியளிக்கவில்லை என விளக்கமளித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது குழுவோ வெளிநாடுகளில் உள்ள எந்தவொரு கட்சியுடன் வெளிப்புற தொடர்புகளை வைத்திருக்க மட்டுமே வைத்திருக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.