Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் பலமான அஸ்திவாரத்தை கட்டத் தொடங்கிட்டோம்.. ஊழல் ப.சி.க்கு ஆதங்கம் ஏன்.? அலறவிடும் அண்ணாமலை.!

உலகின் மிகப் பிரம்மாண்டமான கட்சி, அதிகப்படியான தொண்டர்களை தன்னகத்தே கொண்ட கட்சி பாரதிய ஜனதா கட்சிக்கு எப்போதும் தொண்டர்களின் உறுதியான கட்டமைப்பு உண்டு. கட்டிட அமைப்பு அந்தத்  தொண்டர்களால் உருவாக்கப்படுவது.

We have started to build a strong foundation in Tamil Nadu .. Why does corruption allow PC? Screaming Annamalai.!
Author
Chennai, First Published Nov 26, 2021, 10:19 PM IST

சொந்த கட்சியை, ஒரு மாநில கட்சிக்கு சொம்பு தூக்க வைத்து விட்டு, உண்மை தொண்டர்களின் உழைப்பை உறிஞ்சி விட்டு, கட்சியையும் தொண்டர்களையும் நடுத்தெருவில் நிறுத்திய உங்களைப் போன்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு பாஜகவின் சாதனைகளை  கண்டவுடன் கண்களில் காப்பு காய்ப்பதில் வியப்பில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக ஒரே நாடு என்ற பாஜக பத்திரிகையில் அண்ணாமலை கூறியிருப்பதாவது: ஒரு மகிழ்ச்சியான செய்தி தமிழகத்திலும் நம் கட்சி பலராலும், கவனிக்கப்படுகிறது என்பது மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்படுகிறது., கண்காணிக்கப்படுகிறது.  நம் உள்கட்சி நிகழ்வுகள் கூட பேசு பொருளாகிறது. முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் நகைச்சுவை என நினைத்து தன் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். ‘கட்சி எழும்புகிறதோ இல்லையோ, கட்டிடங்கள் எழும்புகின்றன! நான்கு நகரங்களில் மாவட்டக் கட்சி்யின் புதிய, பெருமதிப்புள்ள அலுவலகக் கட்டிடங்களை ஒரே நாளில் திறக்கும் கட்சிக்குப் பாராட்டுக்கள்!’ என்கிறார் ப.சிதம்பரம்.We have started to build a strong foundation in Tamil Nadu .. Why does corruption allow PC? Screaming Annamalai.!

கரைந்து போன கட்சியிலிருந்து.... காணாமல் போன முன்னாள் தலைவர் தன் ஆதங்க முனகலை அறிவித்திருக்கிறார். பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சியைப் போல விழுந்து கிடக்கவில்லை எழும்பி நிற்க. பாரதிய ஜனதா கட்சியின் ஒவ்வொரு தொண்டனும் தன் தியாகத்தால் உழைப்பால் உருவாக்கிய திருக்கோவில்களாக மாவட்டத்  தலைமை அலுவலகங்கள் உயிர்ப்புடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உங்கள் கட்சியைப்  போல, ஊழல் ப.சி.யுடன், கொள்ளைப் பணத்தில் வீடுகளை கட்டிடங்களை எந்த தனிநபரும் வாங்கிக்  குவிக்கவில்லை. பெரு மதிப்புள்ள அலுவலக கட்டிடங்கள் என்று தாங்கள் குறிப்பிட்டது சரிதான். அதன் சந்தை மதிப்பை நாங்கள் சொல்லவில்லை, எங்கள் கட்சி அலுவலகத்தை நாங்கள் கோவிலாக மதிக்கிறோம் அல்லவா? அதன் மீது பெரும் மதிப்பை வைத்திருக்கிறோம் அல்லவா? அதைத் தாங்கள்  பாராட்டியதற்கு நன்றி.

ஊழல்கள் பல செய்து ஊரெங்கும் உயர் மதிப்புள்ள கட்டிடங்களை வாங்கி குவித்ததால், ஊழலுக்காக சிறையில் இருந்தும்,  பிணையில் இருந்தும், உங்கள் பார்வையின் பழுது மட்டும் மாறவில்லை. சொந்த கட்சியை, ஒரு மாநில கட்சிக்கு சொம்பு தூக்க வைத்து விட்டு, உண்மை தொண்டர்களின் உழைப்பை உறிஞ்சி விட்டு, கட்சியையும் தொண்டர்களையும் நடுத்தெருவில் நிறுத்திய உங்களைப் போன்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு பாஜகவின் சாதனைகளை  கண்டவுடன் கண்களில் காப்பு காய்ப்பதில் வியப்பில்லை. உலகின் மிகப் பிரம்மாண்டமான கட்சி, அதிகப்படியான தொண்டர்களை தன்னகத்தே கொண்ட கட்சி பாரதிய ஜனதா கட்சிக்கு எப்போதும் தொண்டர்களின் உறுதியான கட்டமைப்பு உண்டு. கட்டிட அமைப்பு அந்தத்  தொண்டர்களால் உருவாக்கப்படுவது.We have started to build a strong foundation in Tamil Nadu .. Why does corruption allow PC? Screaming Annamalai.!

இருக்கின்றீர்களா அல்லது இல்லையா என்று  தேடும் நிலையில் இருப்பது, தங்களின் கட்சியே...  பலமான அஸ்திவாரத்துடன் நாங்கள் எங்கள் கட்டமைப்பை தமிழகத்தில் கட்டத்  தொடங்கி விட்டோம். இப்படிப்பட்ட வாழ்த்துக்களை உங்களிடமிருந்து இன்னம் நிறையப் பெற வேண்டியிருக்கிறது... பார்த்துக் கொண்டே இருங்கள்.... வாழ்த்துக்களோடு காத்துக் கொண்டே இருங்கள்...” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios