பாஜக தலைமை முடிவு செய்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

அதிமுக தலைமை அதன் கூட்டணி கட்சிகளுடன் திரைமறைவில் பேச்சுவார்த்தையை நடத்திவருகிறது. எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்ற தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொங்கியுள்ளன. அதிமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை எதிர்பார்த்து பாஜக காத்திருக்கிறது. இன்னொரு புறம் கட்சி நிர்வாகிகள் யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் பணிகளிலும் அக்கட்சி மும்முரமாக ஈடுபட்டுள்ளது.


அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சொந்த ஊர் மற்றும் மாவட்டமான ராசிபுரம், நாமக்கல் மற்றும் சென்னை துறைமுகம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடக் கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தான் எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெளிவுப்படுத்தியுள்ளார்.