பாஜகவினர் பல்வேறு சமூக ஊடகங்கள் மூலம் பொய்த் தகவல்களைப் பரப்ப கோடிக்கணக்கான ரூபாயைச் செலவழிக்கிறார்கள். மத்திய அரசும், பாஜக தொண்டர்களும்தான் மேற்கு வங்காளத்தில் வன்முறையை தூண்டுகிறார்கள். 

மேற்கு வங்க மாநில ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.


 நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளிலும் பாஜக 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தேர்தல் சமயத்திலிருந்தே மாநிலத்தில் நடந்த திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் இடையே மோதல் போக்கு இருந்துவருகிறது. தேர்தலுக்கு பிறகு நடந்த மோதலில் 4 பாஜகவினர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கிடையே மாநில ஆளுநர் கேசரிநாத் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.