Asianet News TamilAsianet News Tamil

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை. அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்ட மக்கள் ரொம்ப உஷாராக இருங்க. பிச்சு உதறப்போகுதாம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  30.09.2021: தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், 

Warning to the people of Tamil Nadu. The people of this district should be very alert for the next 4 days.. Weather Alert for Rain.
Author
Chennai, First Published Sep 30, 2021, 1:36 PM IST

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 30.09.2021: தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், வட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

மேலும், 01.10.2021:  தமிழ்நாடு  மற்றும்  புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் , தென் மாவட்டங்கள் (தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி), டெல்டா (தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்) மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது. 

Warning to the people of Tamil Nadu. The people of this district should be very alert for the next 4 days.. Weather Alert for Rain.

02.10.2021 முதல் 04.10.2021 வரை:  தமிழ்நாடு  மற்றும்  புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், தென் மாவட்டங்கள் ( தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி), டெல்டா (தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்) மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 

Warning to the people of Tamil Nadu. The people of this district should be very alert for the next 4 days.. Weather Alert for Rain.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக் கடல் பகுதிகள் 29.09.2021: தெற்கு இலங்கை கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த  காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 02.10.2021 முதல் 04.10.2021 வரை : குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60  கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios