கேப்டன் விஜயகாந்த் உடல் நிலை குறித்து தலைமைக்கழகம் பரபரப்பு அறிக்கை..!
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார். லேசாக தென்பட்ட கொரோனா அறிகுறி, உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது என தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார். லேசாக தென்பட்ட கொரோனா அறிகுறி, உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது என தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட பின் சென்னை திரும்பிய அவர், கடந்த சில மாதங்களாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் விஜயகாந்த் தவிர்த்து வந்தார். இந்நிலையில், நேற்று விஜயகாந்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், விஜயகாந்த் உடல்நிலை குறித்து தெரியாமல் தேமுதிக தொண்டர்கள் கலக்கத்தில் இருந்தனர்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் நலமுடன் உள்ளதாக தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேமுதிக தலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்லது வழக்கம்.
அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற கேப்டன் விஜயகாந்த்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டுவிட்டது. தற்போது பூரண உடல் நலத்துடன் கேப்டன் விஜயகாந்த் உள்ளார் என தேமுதிக தலைமைக் கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.