Asianet News TamilAsianet News Tamil

எஸ்ரா சற்குணத்தை மிரட்டுகிறாரா ராமதாஸ் ! இந்த வேலையெல்லாம் வேண்டாம் ! வன்னியரசு அதிரடி !!

இந்துத்துவா கும்பலைத் தூண்டிவிடும் பாமக ராமதாசிடம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னியரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

vanniyarasu support yesra sargunam
Author
Chennai, First Published Apr 27, 2019, 11:24 PM IST

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் பேராயர் எஸ்ரா சற்குணம், தான் சார்ந்த சமுதாயத்தை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார் என்று பாமக நிறுவனர் ராமதாசு கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். 

இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி வன்னியரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் கடந்த  24.4.2019அன்று பொன்பரப்பி வன்முறையை கண்டித்து போராட்டம் நடைப்பெற்றது. 

vanniyarasu support yesra sargunam

அப்போராட்டத்தில் பேசிய பேராயர் எஸ்றா சற்குணம் முழுக்க, ராமதாசின் வன்முறை அரசியல் குறித்து பேசினார். ராமதாசின் வன்முறை செயல்பாடுகளை விமர்சித்தே பேசினார். குறிப்பிட்ட சமூகத்தை எந்த இடத்திலும் அவமதித்து பேசவில்லை. 

ஆனால், இன்று வந்த ராமதாசின் அறிக்கையில்,  குறிப்பிட்ட சமுதாயத்தை பேராயர் அவமதித்து விட்டார் என்று திசை திருப்பி உள்ளார்.அது மட்டுமல்ல, மிக மோசமாக தரம் தாழ்ந்து எஸ்றா சற்குணத்தை விமர்சித்து இந்துத்துவக்கும்பலை தூண்டியும் விட்டுள்ளார். 

vanniyarasu support yesra sargunam

ராமதாசின் உள்நோக்கம், சாதி ரீதியாகவும் மதரீதியாகவும் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதே ஆகும்.  ஒரு பொறுப்பான தலைவரின் அறிக்கையாக இல்லை. அந்த அறிக்கையே மிரட்டும் தொனியிலே உள்ளது.

vanniyarasu support yesra sargunam

ராமதாசின் வன்முறை அரசியலை விமர்சித்தால், குறிப்பிட்ட சமுதாயத்தையே விமர்சித்ததாக மடை மாற்றும் போக்கு  ஆபத்தானதாகும்.பேராயர் எஸ்றா சற்குணத்தை ராமதாசு மிரட்டுவதால் அவர் சார்ந்த சமுதாயத்தையே அச்சுறுத்துகிறார் என்று யாராவது மடை மாற்றினால் என்னவாகும்?  என கேள்வி எழுப்பியுள்ளார்.

vanniyarasu support yesra sargunam

இரு சமுதாயத்தாருக்கும் ராமதாஸ் மோதலை உருவாக்க திட்டமிட்டுள்ளாரா? மதமாற்றம் குறித்து அவதூறு  பரப்புவதன் மூலம் பேராயரை இந்துத்துவக் கும்பலிடம் ராமதாசு காட்டிக்கொடுக்க திட்டமிடுகிறாரோ? ராமதாசின் அறிக்கையின் உள்நோக்கம் என்ன?அனைத்து சமுதாய மக்களும் ராமதாசிடம் எச்சரிக்கையாக இருப்போம் என வன்னியரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்..

Follow Us:
Download App:
  • android
  • ios