உத்தரப் பிரதேச அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா பாஜகவில் இருந்து ராஜினாமா செய்து அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்.
அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உத்தரப் பிரதேச அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா பாஜகவில் இருந்து ராஜினாமா செய்து அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்.
மௌரியா தனது ராஜினாமா கடிதத்தில், "தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள், சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் மீதான அலட்சிய மனப்பான்மை" தான் பதவி விலகும் முடிவிற்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் பத்ருனா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி, 2016ல் பாஜகவில் சேர்ந்தார்.
பாஜக ஒரு பெரிய பரப்புரை இயக்கத்தைத் தொடங்கியது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கத்தின் சாதனைகளை முன்னிலைப்படுத்த கட்சித் தொழிலாளர்கள் ஐந்து பேர் கொண்ட குழுக்களாக வீடு வீடாகச் சென்றனர். ஜனவரி 14 முதல், அரசாங்கம் கடந்த ஐந்தாண்டுகளில் என்ன செய்திருக்கிறது என்பதை வாக்காளர்களுக்குத் தெரிவிக்க, பெரிய தொலைக்காட்சித் திரைகள் பொருத்தப்பட்ட ‘எல்இடி ராத்’களையும் கட்சி பயன்படுத்தத் தொடங்கும்.
இதற்கிடையில், உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் கேபி மவுரியா ஆகியோர் டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்திற்கு பாஜக குழுக் கூட்டத்திற்கு வந்தனர்.

மற்றொரு புறம், பஞ்சாபைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ அரவிந்த் கன்னா, எஸ்ஏடி தலைவர் குர்தீப் சிங் கோஷா, அமிர்தசரஸ் முன்னாள் கவுன்சிலர் தரம்வீர் சரின் உள்ளிட்ட பல தலைவர்கள், மத்திய அமைச்சர்களான ஹர்தீப் பூரி மற்றும் கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறுகிறது. ஏழாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு மார்ச் 7ஆம் தேதி நடைபெறும். மார்ச் 10ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் இந்த வருடம் நடைபெறவுள்ளது.
