Asianet News TamilAsianet News Tamil

கேஸ் போடுங்க... முடிஞ்சா அரெஸ்ட் பண்ணுங்க... சசிகலா விவகாரத்தில் உதயநிதி தெனாவெட்டு..!

சென்னையில் நடைபெற்ற திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தன் மீது எந்த வழக்கு வேண்டுமென்றாலும் போட்டுக் கொள்ளுங்கள். முடிந்தால் கைது பண்ணுங்க என்று கூறினார்.

Udayanithi Tenavettu in Sasikala affair
Author
Tamilnadu, First Published Jan 13, 2021, 6:25 PM IST

சென்னையில் நடைபெற்ற திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தன் மீது எந்த வழக்கு வேண்டுமென்றாலும் போட்டுக் கொள்ளுங்கள். முடிந்தால் கைது பண்ணுங்க என்று கூறினார்.

உதயநிதி பிரச்சாரத்தின்போது, அரசியலில் உள்ள பெண்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் கருத்துக்ளை தெரிவித்தார். பொது மக்கள் முகம் சுழிக்கும் வகையில் உதயநிதி தரம் தழ்ந்த கருத்துகளை தெரிவித்தது பெண்கள் மட்டும் அல்லாது தி.மு.கவினரே கடும் கோபத்தில் ஆழ்த்தியது. உதயநிதி தனது பேச்சிற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் பெண்கள் அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர். Udayanithi Tenavettu in Sasikala affair

இதையடுத்து ,  விழுப்புரத்தில் பேசிய உதயநிதி, நான் கலைஞரின்  பேரன்,  மன்னிப்பு கேட்கமாட்டேன் என கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது , ஏற்கனவே குடும்ப அரசியலின் அடிப்படியில் கட்சி பொறுப்புக்கு வந்த உதய் என்று அவர் மீது குற்றச்சாட்டு  வைக்கப்பட்டு வரும் நிலையில், உதயநிதியின் இந்த பேச்சு , குடும்ப அரசியல் திமிரை பறைசாற்றும்  விதமாக அமைந்துள்ளது. எது விதைக்கப்பட்டதோ, அது தன் வளரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில்,  பெண்களை பற்றி தவறாக பேசிய உதயநிதி ,தான் கருணாநிதியின் பேரன் என்று கூறியதை பொருத்திப்பார்க்க முடிகிறது. Udayanithi Tenavettu in Sasikala affair

தன்னுடைய பேச்சிற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் “வேண்டும் என்றால் என் மீது வழக்கு போட்டு கொள்ளட்டும்” என்றும் உதயநிதி தெரிவித்தார். இந்நிலையில், மன்னிப்பிற்கு பதிலாக தன்னுடைய இழிவான பேச்சிற்கு, வருத்தம் தெரிவிப்பதாக உதயநிதி கூறியுள்ளார். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருப்பதாக பெண்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். உதயநிதி பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும், உதயநிதி தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய முடியாத நிலை ஏற்படும், அவர் எங்கு பிரச்சாரத்திற்கு சென்றாலும் அங்கு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் பெண்கள் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், ’’என் மீது எந்த வழக்கு வேண்டுமென்றாலும் போட்டுக் கொள்ளுங்கள். முடிந்தால் கைது பண்ணுங்கள்’’ என  உதயநிதி ஸ்டாலின் தெனாவெட்டாக பதிலளித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios