Asianet News TamilAsianet News Tamil

"எடப்பாடியை 420 எனக் கூற எனக்கு பயமில்லை" - டிடிவி தினகரன் அதிரடி!!

ttv dinakaran says about edappadi
ttv dinakaran says about edappadi
Author
First Published Aug 14, 2017, 1:28 PM IST


ஜெயலலிதா இருந்தபோது அமைதியாக இருந்தவர்களை இப்போது அடக்க ஆளில்லை என்றும் எடப்பாடியை 420 எனக்கூற எனக்கு பயமில்லை என்றும் டிடிவி தினகரன் அதிரடியாக கூறியுள்ளார்.

மதுரை, மேலூரில் அதிமுக அம்மா அணி சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக, டிடிவி தினகரன் இன்று காலை சுமார் 11.30 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், முதலமைச்சரை 420 எனக் கூற எனக்கு பயமில்லை என்று அதிரடியாக கூறியுள்ளார்.

ttv dinakaran says about edappadi

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானது ஒரு விபத்து. எங்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. அவரை 420 எனக் கூற எனக்கு பயமில்லை. பதவி இருக்கின்ற காரணத்தால் ஆடுகிறார்கள். 

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்தரியிலும் குடைப்பிடிப்பான் என்று சொல்வார்கள். அப்படித்தான் இருக்கிறது இவர்களின் செய்கைகள்.

ஜெயலலிதா இருந்தபோது, அமைதியாக இருந்தவர்ளை, இப்போது அடக்க ஆளில்லை. தவறு செய்பவர்கள் அனைவரும் திருத்தப்படுவார்கள். மூக்கணாங் கயிறு போட்டு அவர்களை அடக்குவோம். எடப்பாடி பழனிசாமி யார் என்பதை இன்று மாலை கூறுவேன் என்று டிடிவி தினகரன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios