Asianet News TamilAsianet News Tamil

அவர்களை காத்திருக்க வைப்பது சரியானதல்ல... உடனே உத்தவை பிறப்பிக்க வேண்டும்.. முதல்வருக்கு டிடிவி கோரிக்கை..!

போக்குவரத்து துறையில் கடந்த 2020 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பணி ஓய்வு பெற்றவர்களுக்கான பலன்களை வழங்குவதற்குரிய உத்தரவினை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என டிடிவி.தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.

transport workers demands...TTV Dhinakaran request to edappadi
Author
Tamil Nadu, First Published Jan 5, 2021, 3:06 PM IST

போக்குவரத்து துறையில் கடந்த 2020 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பணி ஓய்வு பெற்றவர்களுக்கான பலன்களை வழங்குவதற்குரிய உத்தரவினை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என டிடிவி.தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- போக்குவரத்து துறையில் கடந்த 2020 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பணி ஓய்வு பெற்றவர்களுக்கான பலன்களை வழங்குவதற்குரிய உத்தரவினை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்.

transport workers demands...TTV Dhinakaran request to edappadi

மே 2020-க்குப் பிறகு ஓய்வுபெற இருந்தவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 2019 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும் பலன்களை வழங்கிவிட்டு இடைப்பட்ட 4 மாதங்களில் ஓய்வு பெற்றவர்களைக் காத்திருக்க வைப்பது சரியானதல்ல. எனவே, இதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios