Asianet News TamilAsianet News Tamil

கட்டிய மனைவிக்கே பாலியல் டார்ச்சர்.. பெண்ணுறுப்பில் இரும்பு கம்பி.. சைகோ கணவன் மீது மனைவி கண்ணீர் புகார்.

இந்த புகார் மனுவை படித்து அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதில் அந்தப் பெண்ணை அவர் அடித்து துன்புறுத்துவது உறுதியாகியுள்ளது. 

Tortured wife sexually abused .. Iron rod in Private part .. Wife tears complaint on psycho husband.
Author
Chennai, First Published Feb 24, 2021, 1:41 PM IST

கணவன் தன்னுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், தன்னுடைய பெண்ணுறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து அவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் மனைவியின் போலீசில் பகீர் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்புகார் மீது போலீசார்   வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது அம்மாநிலம் மட்டுமல்லாது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

Tortured wife sexually abused .. Iron rod in Private part .. Wife tears complaint on psycho husband.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது, அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள்  அன்றாடம் அரங்கேறி வருகிறது.  குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் இதுபோன்ற கொடுமைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நிகழ்ந்து வருவதை நாம் ஊடகங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அந்த வரிசையில்  உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு பெண் காவல் நிலையத்தில் அதிர்ச்சிப் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது உத்திரபிரதேசம் மாநிலம் கவுஸ் சாம்பி  காவல் நிலையத்தில் பெண் ஒருவர், தனக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆவதாகவும், இந்நிலையில் தனது கணவர் தொடர்ந்து தன்னை வலுக்கட்டாப் படுத்தி  தன்னை வன்புணர்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை அடித்து காயப்படுத்துவதுடன் தனது பெண்ணுறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து கொடுமை செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

Tortured wife sexually abused .. Iron rod in Private part .. Wife tears complaint on psycho husband.

இந்த புகார் மனுவை படித்து அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதில் அந்தப் பெண்ணை அவர் அடித்து துன்புறுத்துவது உறுதியாகியுள்ளது. ஆனால் அவர் பெண்ணுறுப்பில் இரும்புக்  கம்பியை நுழைத்து கொடுமை படுத்தியது  உறுதியாகவில்லை, ஆனாலும் போலீசார் அது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் போலீஸ் சூப்பிரண்ட் அபிநந்தன், இது கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை, இருவருக்கும் திருமணம் நடந்து 20 ஆண்டுகள் ஆகின்றன, போலீசார் அந்த பெண்ணின் புகாரை விசாரித்து வருகின்றனர். கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் மீது அப்பெண் வரதட்சணை புகார் கொடுத்துள்ளார், அதில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.  

 

Follow Us:
Download App:
  • android
  • ios