tn govt need some mgr photos

சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுவதையொட்டி பொது மக்களிடம் அவரின் அரிய புகைப்படங்கள் இருந்தால் அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா, கடந்த ஜூன் 30–ந்தேதி மதுரையில் தொடங்கி, தொடர்ந்து மாவட்ட அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் நிறைவுவிழா, வரும் ஜனவரி மாதம் சென்னையில் மிகவும் பிரமாண்டமான விழாவாக நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த விழாவில் நூற்றாண்டு விழா மலர் வெளியிடப்பட உள்ளது. நூற்றாண்டு விழா மலர், புகைப்படத் தொகுப்பு, குறும்படம், எம்.ஜி.ஆரின் பொதுவாழ்வு, கலைத்துறை மற்றும் அரசியல் துறை ஆகியவற்றின் அரிய புகைப்படங்கள், கட்டுரைகள், சம்பவங்கள், கவிதைகள் உள்ளடக்கி இந்த மலர் வெளியிடப்பட உள்ளது.

எனவே எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்கள் வைத்திருப்போர் தலைமைச் செயலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ்இயங்கும் புகைப்படப்பிரிவில் நேரடியாகவோ அல்லது இயக்குனர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, புகைப்படப் பிரிவு, தலைமைச் செயலகம், சென்னை–9 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமோ அல்லது idfieldpublicity@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதே போன்று 9444127340 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகைப்படங்கள் குறித்து தகவல் தெரிவித்தால் அரசு அதை நேரடியாக வந்து பெற்றுக் கொள்ளும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.