கீழடிக்கு பக்கத்து ஊரு... அண்ணாத்த பேசுல ஸ்டைலு... அண்ணாத்தா வர்றார் வர்றார்..!
45 ஆண்டுகள் என் குரலாக வாழ்ந்தவர் எஸ்.பி.பி என நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி அளித்துள்ளார்.
45 ஆண்டுகள் என் குரலாக வாழ்ந்தவர் எஸ்.பி.பி என நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி அளித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடித்த 160 படமான அண்ணாத்த படத்தை சிவா இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகி இருக்கிறது. ’அண்ணாத்த அண்ணாத்த வர்றார் வர்றார் அதிரடி சரவெடி வீசு... அண்ணாத்த பேசுல ஸ்டைலு... அண்ணாத்த பாடினா ஸ்டைலு... கொண்ட்டாட்டம் கொண்டாட்டம்தான். கீழடிக்கு பக்கத்தூரு’ எனும் டி.இமான் இசையமைத்த அந்தப்பாடலை மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியன் பாடியுள்ளார். இந்த பாடல் அவர் இறக்கும் முன் பாடிய கடைசிப்பாடல்.
இதுகுறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில், ‘’45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு! மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடைசியாக பாடிய பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.