திமுக கூட்டும் அனத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து மக்கள் நலக்கூட்டணி முடிவுக்கு மாறான நிலை எடுத்த திருமாவளவன் மீண்டும் பல்டி அடித்து மக்கள் நலக்கூட்டணி தலைவர்களுடன் ஆலோசித்து பின்னர் முடிவெடுப்பேன் என மீண்டும் பல்டியடித்துள்ளார் .
Add Asianetnews Tamil as a Preferred Source

தோழமை கட்சிகளுடன் ஆலோசித்த பிறகு திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது பற்றி முடிவு எடுக்கப்படும். திருமாவளவன் அறிவிப்பு
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்த திமுக-விற்கு நன்றி தெரிவித்துள்ளார் திருமாவளவன்
திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிடம் வலியுறுத்தப்படும் எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நிலையான அரசியல் முடிவு எடுக்காமல் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி வருகிறார் திருமா என மதிமுக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார் .
