Asianet News TamilAsianet News Tamil

நாடு ஒற்றுமையாக இருப்பதற்கு காரணம் சனாதனம்.. அரசியல் சாசனம் இல்லை.. வன்மத்தை கக்கிய எச். ராஜா

நாடு ஒற்றுமையாக இருப்பதற்கு காரணம் சனாதனம் தான் என்றும் அரசியல் சாசனம் அல்ல என்றும்  எச் ராஜா பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சனாதன தர்மம் இந்துக்களை இழிவுபடுத்துவதாக ஆ.ராசா பேசி உள்ள நிலையில் எச்.ராஜா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

 

The reason for the unity of the country is Sanathanam.. there is no constitution.. H.Raja.
Author
First Published Sep 20, 2022, 6:31 PM IST

நாடு ஒற்றுமையாக இருப்பதற்கு காரணம் சனாதனம் தான் என்றும் அரசியல் சாசனம் அல்ல என்றும்  எச் ராஜா பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சனாதன தர்மம் இந்துக்களை இழிவுபடுத்துவதாக ஆ.ராசா பேசி உள்ள நிலையில் எச்.ராஜா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்து மதம் சாதி வர்ணத்தை போதிக்கிறது என்றும் அது மக்களை இழிவுபடுத்துகிறது என்றும்  பேசினார், சனாதன தர்மத்தை பொருத்தவரையில் ' நீ இந்து என்றால் நீ சூத்திரன் தான்,  நீ இந்து என்றால் நீ தீண்டத்தகாதவன் தான், நீ இந்து என்றால் பஞ்சமன்தான்,  சூத்திரன் என்றால் வேசியின் பிள்ளை என்று பொருள், அப்படி என்றால் வேசியின் பிள்ளைகளாக இருக்க எத்தனை பேர் விரும்புகிறீர்கள் என அவர் கேள்வி எழுப்பினார். 

The reason for the unity of the country is Sanathanam.. there is no constitution.. H.Raja.

இதையும் படியுங்கள்:  மக்கள்நல பணியாளர்களின் வாழ்க்கை சீரழிவு.. அதிமுக, திமுக தான் காரணம்.. ஓங்கி அடித்த சீமான்!

அவரின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஆ.ராசா இந்துக்களை இழிவுபடுத்தி விட்டார் என குற்றம் சாட்டி வருகின்றனர்,   இக்குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள ஆ. ராசா, அது தன்னுடைய கருத்து அல்ல, சனாதனத்தில் இருப்பதைத்தான்  தான் மேற்கோள்காட்டியிருப்பதாக விளக்கம் அளித்துள்ளார். தான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை, சனாதன தர்மம் தான் அப்படி  சொல்கிறது என்றும் அவர் ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்: சுப்பு லட்சுமி: அரசியலில் இருந்து விலகுவதாகதான் கூறியுள்ளார், பாஜகவில் சேரப்போவதாக கூறவில்லையே, டிகேஎஸ்

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, இக்குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துள்ளார்.  அதாவது இந்து மதத்தை யாரும் உருவாக்கவில்லை, அது தானாக உருவானது, கிருஷ்ண பரமாத்மா எதை கூறினாரோ அதைத்தான் திருவள்ளுவரும் கூறியுள்ளார். இந்திய நாட்டில் தற்போது அம்பேத்கர் வடிவமைத்த சட்டம்தான் நடைமுறையில் உள்ளது, ஆனால் உள்நாட்டில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதற்கு காரணம் அரசியலமைப்புச் சட்டமல்ல, சனாதன தர்மம் தான் அனைவரையும் ஒற்றுமையாக வைத்துள்ளது.

The reason for the unity of the country is Sanathanam.. there is no constitution.. H.Raja.

எனவே சனாதன தர்மம் குறித்து பேசியுள்ள ஆளுநர் ஆர்.என் ரவி குறித்து ஆ. ராசா தவறாக பேசியுள்ளார். சனாதன தர்மத்தில் இந்துக்களை சூத்திரர்கள் என்று ஒருபோதும் கூறவில்லை, ஆனால் ஆ. ராசா இது பற்றி பொய்யான தகவல்களை பேசி வருகிறார், பெரியாரின் உலறல்களை வைத்துக் கொண்டு இந்து மதத்தை இழிவு  படுத்துகிறார். இதை இனியும் அனுமதிக்க முடியாது, எனவே காவல்துறை ஆ. ராசவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

என எச்.ராஜா பேசியுள்ளார். அதாவது இந்திய அரசியலமைப்பு சட்டமே  நாட்டை வழி நடத்தி வருகிறது,  இந்நிலையில் சனாதன தர்மம் தான் நாட்டை ஒற்றுமையாக வைத்துள்ளது என எச்.ராஜா சர்ச்சைக்குரிய வகையில், அபத்தமாக  பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios