இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.
தமிழகத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களை பிரதமர் கூர்ந்து கவனித்து வருகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா;- இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மிகப்பெரிய இலக்கை எட்டியுள்ளது. விளையாட்டு வீரர்கள் நலன் மற்றும் உயர்வுக்காக பாடுபட்டவர் சீனிவாசன். 75 ஆண்டுகள் நிறைவு செய்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வளர்ச்சி என்பது நாட்டின் கட்டமைப்பை பொறுத்து அளவிடப்படுகிறது. தரமான கட்டமைப்புக்கு அடிப்படையானது சிமெண்ட்.
இதையும் படிங்க;- KCR Telangana: 5வது முறையாக பிரதமர் மோடியை வரவேற்காமல் புறக்கணிக்கும் தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ்

இந்தியா சிமெண்ட்ஸின் தற்போதைய வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றியவர் சீனிவாசன். வளர்ச்சி அடைந்த நாடுகள் பட்டியலில் 3வது இடத்தை பிடிக்க இந்தியா தீவிரமாக முயன்றுள்ளது. மத்திய பாஜக அரசு பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. ஜி 20 நாடுகளில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறும். உலகிற்கு எடுத்துகாட்டாக ஊழலற்ற உன்னதமான ஆட்சியை பாஜக அரசு நடத்தி வருகிறது.

தமிழகத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களை பிரதமர் கூர்ந்து கவனித்து வருகிறார். தமிழகத்திற்கான வரி பகிர்மானத்தை மத்திய அரசு உயர்த்தி வழங்கியுள்ளது. உலகின் மூத்த மொழியான தமிழால் தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே பெருமை. தமிழகத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் பிரதமர் மோடி. மருத்துவம், பொறியியல் படிப்புகளில் தமிழ் வழி கல்வியை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். ஆங்கிலத்தில் இருப்பதால் அரசு பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தமிழ் மொழியின் பெருமை தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியா அனைத்திற்குமானது என மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- KCR MODI:தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சியை கட்டம் கட்டும் பாஜக! ஜனசேனா, டிடிபியுடன் கூட்டணிக்கு ‘மாஸ்டர் பிளான்’
