Asianet News TamilAsianet News Tamil

மோடி மீது நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.. ஒரே நம்பிக்கை காங்கிரஸ்.. பாஜகவை டார் டாராக கிழித்த அழகிரி.

உலகின் இரண்டாவது  மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரயில்வேயை பிரதமர் மோடி தனியாருக்கு விற்கபார்க்கிறார், அதனுடன் ரயில்களையும் சேர்த்து விற்க பார்க்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார். 

The people of the country have lost faith in Modi .. The only hope is the Congress .. Alagiri who tore the BJP to shreds.
Author
Chennai, First Published Sep 27, 2021, 9:44 AM IST

உலகின் இரண்டாவது  மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரயில்வேயை பிரதமர் மோடி தனியாருக்கு விற்கபார்க்கிறார், அதனுடன் ரயில்களையும் சேர்த்து விற்க பார்க்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார். காஷ்மீர் மக்கள் நேருவைதான் ஏற்றுக்கொண்டனர் ஜின்னாவை அல்ல என்ற அவர் ஆனால் பிரதமர் மோடி அனைத்து மேடைகளிலும் பொய் கூறி வருகிறார் என கே எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். 

The people of the country have lost faith in Modi .. The only hope is the Congress .. Alagiri who tore the BJP to shreds.

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முப்பெரும் விழா சைதாப்பேட்டையில் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கலந்து கொண்டார், பின்னர் மேடையில் பேசிய அவர் கூறியதாவது, காங்கிரஸ் தொண்டர்கள் அரசியல் ரீதியாக தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும், ஒவ்வொரு தோழரும் அரசியல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும், இந்தியாவில் இன்று பெட்ரோல் டீசல் விலை என்ன நிலைமையில் இருக்கிறது, விலை ஏற்றத்திற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பி அவர், மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் 108 டாலர் என்ற அளவில் இருந்தது ஆனால் இன்று கச்சா எண்ணெய் விலை 50 டாலர் தான், ஆனால் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இதிலிருந்தே மோடியின் செயலற்ற தன்மையை நாம் அறிய முடியும் என்றார், அதேபோல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1000 ரூபாயை தாண்டி விட்டது. 

The people of the country have lost faith in Modi .. The only hope is the Congress .. Alagiri who tore the BJP to shreds.

தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தவறான புள்ளி விவரங்களை கூறிவருகிறார், மத்திய அரசின் மக்களுக்கு எதிரான இந்த அட்டூழியங்களை காங்கிரஸ் தொண்டர்கள் மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்க வேண்டும், இந்த நாட்டை உருவாக்கியவர்கள் காங்கிரஸ்காரர்கள், நாட்டுக்கு உருவம் கொடுத்தவர்கள் காங்கிரஸ்காரர்கள், அதேபோல் காங்கிரஸ் கட்சியின் 60 ஆண்டு ஆட்சி காலத்தில்தான், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிக்கப்பட்டது, இப்போது உலகின் மிகப்பெரிய இரண்டாவது பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியாருக்கு மோடி விற்க பார்க்கிறார், அதில் ரயிலையும் சேர்த்து விற்கிறார் என் ஆதங்கம் தெரிவித்தார். இப்போது வட கிழக்கு மாநில மக்களுக்கும் காஷ்மீர் மக்களுக்கும், தென் இந்தியர்களுக்கும் காங்கிரஸ் கட்சிதான் ஒரே நம்பிக்கை என அவர் கூறினார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios