கனிமொழிக்கு நடந்த சம்பவம் எனக்கும் நடந்துள்ளது... ப.சிதம்பரம் வேதனை..!
“திமுக எம்.பி., கனிமொழிக்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவம் தனக்கும் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
“திமுக எம்.பி., கனிமொழிக்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவம் தனக்கும் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி தொகுதி எம்.பி., கனிமொழி டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கனிமொழியிடம் இந்தியில் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு கனிமொழி, தனக்கு இந்தி தெரியாது. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள் எனக் கேட்டுள்ளார். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியர்தானே என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பலரும் சிஐஎஸ்எஃப் அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அந்த அதிகாரியிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிள்ளது.
இதுகுறித்து ப.சிதம்பரம்,“திருமதி கனிமொழி அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் நான் உட்பட பலருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டும் அலுவல் மொழிகள் (official languages) என்பதை மறுக்கும் வகையில் பல மத்திய அரசு அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். இதை வல்லமையுடன் வன்மையாக எதிர்க்க வேண்டும்.
மத்திய அரசு பணியென்றால் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் தேவைக்கேற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும் என்று அரசு எல்லோருக்கும் அறிவுறுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.