Asianet News TamilAsianet News Tamil

சசிகலா தினகரனுக்கு கல்தா...!!! - எடப்பாடி கூட்டத்தில் அதிரடி முடிவு...!!

The decision to remove Sasikala Dayan from the party was in consultation with Chief Minister Edappadi Palaniasamy.
The decision to remove Sasikala Dayan from the party was in consultation with Chief Minister Edappadi Palaniasamy.
Author
First Published Aug 28, 2017, 11:53 AM IST


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சசிகலா தினகரனை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவது என எடப்பாடி குழு முடிவெடுத்ததையடுத்து டிடிவி தினகரன் சில அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். 

மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.

இதனால் அந்த 19 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி தமிழக அரசின் கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில், ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏஎக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.பிக்கள்., எம்எல்ஏக்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

2 மணி நேரம் கூட்டம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், சசிகலா தினகரனை கட்சியில் இருந்து நீக்கவும், சசிகலா தினகரன் கட்சி நடவடிக்கைகள் செல்லாது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

சசிகலாவை நீக்குவது குறித்து பொதுக்குழு கூட்டப்படும் எனவும்,  ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர் ஆகியவற்றை மீட்டெடுப்பது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மேலும் டிடிவி தினகரன் அறிவித்த பொறுப்புகளும் செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை முழுமையாக கட்சியை விட்டு ஓரங்கட்ட களமிறங்கிவிட்டார் எடப்பாடி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios