Asianet News TamilAsianet News Tamil

மூவருக்கு மட்டும்தான் அந்த அருள்... சசிகலாவிடமிருந்து போன்... அதிர்ச்சியில் எடப்பாடி- ஓ.பி.எஸ்..!

அடுத்தடுத்து ஆடியோக்களை வெளியிட்டு அடித்து ஆடத்த்துவங்கி விட்டார் சசிகலா. இதனால் எடப்பாடி- ஓ.பி.எஸ் டீம்கள் அதிர்ச்சியாகிக் கிடக்கின்றன.

That grace only for three ... Phone from Sasikala ... Edappadi in shock- OPS
Author
Tamil Nadu, First Published Jun 2, 2021, 3:44 PM IST

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆளுக்கொரு பக்கம் இருந்து அரசியல் செய்துகொண்டிருக்கும் நிலையில் சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரவேண்டிய அத்தனை பணிகளும் நடைபெற்றுவருவதாக கூறுகிறார்கள்.

That grace only for three ... Phone from Sasikala ... Edappadi in shock- OPS

ஒற்றைத்தலைமையின் கீழ் அதிமுக வர வேண்டும் என்று அக்கட்சியின் தொண்டர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அதையேதான் விரும்புகிறார்கள். ஆனால், அந்த ஒற்றத்தலைமை யார் என்பதலிதான் அவர்களுக்குள் போட்டா போட்டி நடந்து வருகிறது. இடையில் புகுந்து தான் அந்த ஒற்றத்தலைமை பொறூப்பை ஏற்றுவிடலாம் என்றும் செயல்பட்டு வருகிறார் சசிகலா. அண்மையில் வெளிவந்த அவரது ஆடியோக்கள் அதைத்தான் சொல்கின்றன. ஆனால், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அதிமுகவிற்குள் சசிகலா வரமுடியாது என்று அடித்துசொல்கிறார்.That grace only for three ... Phone from Sasikala ... Edappadi in shock- OPS

இந்த சூழலில், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக முன்னாள் மாவட்டசெயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவை மீட்டு சசிகலாவின் ஒற்றைத்தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மாநில எம்.ஜி.ஆர். கழக துணைச் செயலாளர் சுப்பிரமணியம் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் இருக்குவரை அதிமுக அழிவை சந்திக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே சசிகலா ஆடியோவால் அதிமுகவிற்குள் சலசலப்பு ஏற்பட்டபோது, அதிமுகவிற்குள் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார் சசிகலா. அவரது எண்ணம் நிறைவேறாது என்றார் முனுசாமி. இப்போது இந்த அறிக்கைகளால் அதிமுகவில் மேலும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் சசிகலா அதிமுக தொண்டரிடம் பேசிய 4வது ஆடியோ வெளியாகி இருக்கிறது.

 சென்னையைச் சேர்ந்த அதிமுக தொண்டர் டாக்டர் ராஜாரகுபதிக்கு சசிகலா வீட்டிலிருந்து போன் செய்யப்பட்ட அந்த ஆடியோவில்,   
சசிகலா: வணக்கம் நல்லாயிருக்கீங்களா?

 That grace only for three ... Phone from Sasikala ... Edappadi in shock- OPS

ராஜாரகுபதி: உங்களை நினைத்து நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன், தமிழக மக்களை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் (அழுகையுடன்)

சசிகலா: இல்லை இல்லை, அய்யோ நான் வந்துடுவேன், கவலைப்படாதீர்கள்

ராஜாரகுபதி:  தமிழகம் நீங்கள் இல்லாமல் நாதியில்லாமல் தமிழகம் இருக்கிறது.

சசிகலா: கட்சியை நல்லபடியாக கொண்டு செல்ல வேண்டும். ஜெயலலிதா இருந்தபோது எப்படி இருந்ததோ அந்த அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும். அது போல் ஆட்சியையும் கொண்டு வரவேண்டும் என்பதுதான் எனது எண்ணம். 

ராஜாரகுபதி: நான் தீக்குளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்தேன். நீங்கள் கேமராவில் பாருங்தள் அம்மா. என்னை போலீஸார் தடுத்துவிட்டார்கள்.

சசிகலா: தீக்குளிக்க முயற்சித்தது நீங்கள்தான் என சொன்னார்கள். அதெல்லாம் செய்யக் கூடாது. விரைவில் வருவேன் கவலைப்படாதீங்கள். விரைவில் நான் வருவேன். கட்சி நன்றாக இருக்கும்.

ராஜாரகுபதி: அம்மா நீங்கள் அந்க கோல்ட் கலர் லைட் போட்டுட்டு காரில் வரவேண்டும். உங்கள் முகத்தை பார்த்தால்தான் அனைவரும் சரணடைவார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அடுத்து ரோஜாப்பூ மாதிரி இருக்கும் உங்கள் முகத்தை அனைவரும் பார்க்க வேண்டும். ஜாதகம் ஜாதக ரீதியில் தொண்டர்களை கட்டுப்படுத்த உங்கள் மூவருக்கு மட்டும்தான் அந்த அருள் உண்டு. சூரியனின் ஆட்சி உள்ளது உங்கள் ஜாதகம், அதனால் உங்களுக்குத்தான் அனைவரும் கட்டுப்படுவார்கள். மற்றவர்கள் அவசரத்தில் வந்தவர்கள். உங்களை நான் ஒரு முறை பார்க்க வேண்டும்.

சசிகலா: கொரோனா தாக்கம் குறையட்டும், நான் வருகிறேன், அனைவரையும் சந்திக்கிறேன். That grace only for three ... Phone from Sasikala ... Edappadi in shock- OPS

ராஜாரகுபதி: அதிமுக மீதான அதிருப்தியில்தான் மக்கள் அனைவரும் மாற்றுக் கட்சிக்கு ஓட்டு போட்டுவிட்டார்கள். அம்மா வீட்டில் இல்லாவிட்டால் பக்கத்து வீட்டுக்காரங்க வீட்டில் சாப்பிடுவது போல் நீங்கள் இல்லாததால் அடுத்தவங்களுக்கு ஓட்டு போட்டுவிட்டார்கள். பிரச்சார வாகனத்தில் தங்க விக்கிரகம் போல் நீங்கள் ஜொலிக்க வேண்டும்’’என முடிகிறது அந்த ஆடியோ... இன்னும் அடுத்தடுத்து ஆடியோக்களை வெளியிட்டு அடித்து ஆடத்த்துவங்கி விட்டார் சசிகலா. இதனால் எடப்பாடி- ஓ.பி.எஸ் டீம்கள் அதிர்ச்சியாகிக் கிடக்கின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios