Asianet News TamilAsianet News Tamil

மத்திய அரசு அறிவித்ததுபோல நீங்களும் அறிவியுங்க..!! எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் ஆசிரியர்கள்...!!

அகவிலைப்படி என்பது ஆறு மாதத்திற்கு ஒருமுறை விலைவாசி ஏற்றம்- இறக்கம்  அடிப்படையாகக் கொண்டு புள்ளியியல் அடிப்படையில் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.  

tamilnadu teachers association demand 4 percentage hike like central government  announcement
Author
Chennai, First Published Mar 18, 2020, 12:14 PM IST

மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டதைப்போல மாநில அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி வழங்கிட தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது . இது குறித்து அச்சங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் :-  மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநில அரசின் கீழ் ப்பணிபுரியும் ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப் படியினை உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறது. 

tamilnadu teachers association demand 4 percentage hike like central government  announcement

மேலும் அகவிலைப்படி என்பது ஆறு மாதத்திற்கு ஒருமுறை விலைவாசி ஏற்றம்- இறக்கம்  அடிப்படையாகக் கொண்டு புள்ளியியல் அடிப்படையில் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.  ஆசிரியர்-அரசு ஊழியர்கள், ஓய்வூதியத்தாரர்கள், குடும்ப ஓய்வூதியத்தாரர்கள் உள்ளிட்ட 18 லட்சம் ஆசிரியர்- அரசு ஊழியர்கள் குடும்பங்கள் மொத்தம் ஒன்றரை கோடி பேர் பயன்பெறுவார்கள். ஆகையால்,  ஆசிரியர்-அரசு ஊழியர்கள் அரசின் நலத்திட்டங்களை கடைகோடி குடிமகனுக்கும் எடுத்துச்செல்லும் பணியினை சிறப்பானமுறையில்  செய்துவருவது அனைவரும் அறிந்ததே. 

tamilnadu teachers association demand 4 percentage hike like central government  announcement

எனவே மத்திய அரசு அறிவித்துள்ள 4% அகவிலைப் படியினை மாநில ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தி வழங்கிட ஆவனசெய்யும்படி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios