வரும் 23ம் தாக்கலாகிறது தமிழக இடைக்கால பட்ஜெட்.. அறிவிப்புகளை அள்ளிவிடப்போகும் அதிமுக அரசு.. திகிலில் திமுக.!
தமிழக இடைக்கால பட்ஜெட்டை வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.
தமிழக இடைக்கால பட்ஜெட்டை வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் பிப்ரவரி 2-ம் தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டப்பேரவை கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். இக்கூட்டத்தொடர் பிப்ரவரி 5ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து வரும் 23ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தல் வர உள்ள நிலையில் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே அதிமுக அரசால் தாக்கல் செய்ய முடியும். இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். தேர்தல் நேர பட்ஜெட் என்பதால் புதிய இலவச அறிவிப்புகள் இடம்பெற கூடும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது.
குறிப்பாக தாலிக்கு தங்கம் திட்டம் கடந்த ஓராண்டாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. புதிய வடிவில் இந்த திட்டத்தை செயல்படுத்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. ஏழைகளுக்கு பட்டா வழங்குவது தொடர்பாகவும் அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது. இதைதவிர தொழில்துறையை ஊக்குவிப்பது தொடர்பாகவும் அறிவிப்புகள் வெளியாகும். குறிப்பாக பெண் வாக்காளர்களை கவரும் வகையிலும் புதிய திட்டங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.