நல்ல எண்ணத்தில் பேசிய ஜோதிகா..!! அரசியல் ஆதாயம் தேடும் மத வெறி சக்திகள்... கொதிக்கிறது கம்யூனிஸ்ட் கட்சி..!!
அனைத்து இந்திய குடிமக்களுக்கும் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு அதற்கு மாற்றுக் கருத்து இருந்தால் நாகரீகமான முறையில் மறுப்பு சொல்லி விவாதிக்கலாம் கடவுள் உண்டா இல்லையா என்கிற விவாதம் கூட பன்னெடுங்காலமாக நடந்து வருகிறது ,
விருது வழங்கும் விழா ஒன்றில் திரைக் கலைஞர் ஜோதிகா பேசியதை அண்மையில் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது தஞ்சாவூரில் படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்க சென்றபோது அங்குள்ள அரசு மருத்துவமனையின் அவலமான நிலையைக் கண்டு வருந்தியதாகவும் கோவில்களுக்கு செலவு செய்து பராமரிப்பது போல அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு பள்ளிகளையும் பராமரிக்க வேண்டும் என்ற பொருளில் தான் அவர் பேசியுள்ளார் . ஆனால் அவருடைய பேச்சை முன்னும் பின்னுமாக வெட்டிப் பிரித்து அவர்களுக்கு எதிராக பேசி விட்டது போல சிலர் விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் . அவரது பேச்சை முழுமையாக கேட்கும் யாரும் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டு தலங்களுக்கு எதிராகவும் அவர் பேசவில்லை என்பதை புரிந்துகொள்ள முடியும்.
அரசு மருத்துவமனைகள் பள்ளிகளின் அவசியத்தையும் மக்கள் அதை பாதுகாக்க வேண்டியதன் தேவையையும் வலியுறுத்தியுள்ளார் . இதில் எந்த தவறும் இல்லை இன்னும் சொல்லப்போனால் கொடூரமான இந்த கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளின் அருமையை அனைவரும் உணர்ந்துள்ளனர் அந்த மருத்துவமனைகளில் தரம் உயர்த்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும் ,கொரோனா காலத்தில் மத்திய மாநில அரசுகளின் போதாமை அம்பலமாகி வரும் நிலையில் அதை திசை திருப்புவதற்காகவே சமூக ஊடகங்களில் சில மதவெறி சக்திகள் இந்த பிரச்சனையை ஊதி பெரிதாக்கி மக்களது கவனத்தை திசை திருப்ப முயல்கின்றன. ஜோதிகாவையும் அவருடைய குடும்பத்தினரையும் இழிவுபடுத்தும் வகையில் அனாகரிகமான பதிவுகளை சமூக ஊடகங்களில் சிலர் எழுதி வருகின்றனர் .
அனைத்து இந்திய குடிமக்களுக்கும் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு அதற்கு மாற்றுக் கருத்து இருந்தால் நாகரீகமான முறையில் மறுப்பு சொல்லி விவாதிக்கலாம் கடவுள் உண்டா இல்லையா என்கிற விவாதம் கூட பன்னெடுங்காலமாக நடந்து வருகிறது , இத்தகைய விவாதங்களை இப்போதும் நடத்துவதற்கான உரிமையை நம்முடைய அரசியல் சாசனம் வழங்கியுள்ளது . ஆனால் சமீபகாலமாக சாதி மத இன வெறி சக்திகள் ஒருவரது கருத்தைத் திரித்துக் கூறுவது அவதூறு மூலம் அவரது வாயை அடைக்க முயல்வதும் நடந்து வருகிறது . இது ஆரோக்கியமானதல்ல திரைக் கலைஞர் ஜோதிகாவை இழிவுபடுத்துவோர் மீது தமிழக அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதுடன், கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க நடைபெறும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது என அக்கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.