tamilisai advise to stalin

தூத்துக்குடி சம்பவத்தை ஒட்டி எதிர்க்கட்சிகள் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் எனப் பல வகையில் அரசுக்கு எதிரான போராட்ட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. மேலும் அரசு பொதுச் சொத்துக்கு சேதங்களும் விளைவிக்கப்படுகின்றன. மர்ம நபர்கள் பலர் பொதுச் சொத்தினை தீயிட்டு கொழுத்தி வருகின்றனர் இதனால் தமிழகமே போராட்ட களமாக மாறியுள்ளது.

இந்நிலையில் பா.ஜ.க மாநிலத்தலைவர் தமிழிசை சென்னை விமான நிலையத்தில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். பா.ஜ.க ஆட்சி அமைத்து நான்குவருடங்கள் ஆனதை ஒட்டி பா.ஜ.க மக்களுக்கு வழங்கிய திட்டங்கள் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார்கள் பா.ஜ.க தலைவர்கள்

அதில் தூத்துக்குடி சம்பவத்தில் இயல்பாக நடைப்பதை சூழ்ச்சிகளாக்கி எதிர்க்கட்சிகள் தமிழகத்தை போராட்டகளமாக் வைத்துள்ளனர். மக்கள் வரிப்பணம் இழப்பு ஏற்படுவதை போராட்டக்காரர்கள் உணர வேண்டும். எனத் தெரிவித்தார். பேரவையில் வெளிநடப்பு செய்வதை விட்டு ஆக்கபூர்வமாக செயல்பட ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்கினார் தமிழிசை