தமிழகத்தில் ஏழை மக்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியுதவி திட்டத்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தில் ஏழை மக்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியுதவி திட்டத்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 12-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் தமிழகம் முழுவதும் 60 லட்சம் ஏழை தொழிலாளர்கள், விவசாயிகள் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி உதவியாக தமிழக அரசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகை இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தேர்தலை மனதில் வைத்தே இந்த பணம் கொடுக்கப்படுவதாகவும், அரசு பணம் வீணடிக்கப்படுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

ஏழை குடும்பங்கள் கணக்கெடுப்பு தவறாக உள்ளது. 18 லட்சம் குடும்பங்கள்தான் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளது. ஆனால் 60 லட்சம் பேருக்கு நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தேர்தலுக்கான உத்தரவாகும் என்று, சட்டப் பஞ்சாயத்து சார்பில் வாதிடப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், 2006ம் ஆண்டு முதல் ஏழை குடும்பங்களுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்காக அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த கணக்கெடுப்பு படிதான் அரசு இந்த முடிவுக்கு வந்தது. இவ்வாறு கூறி அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தார்.
இந்நிலையில் தமிழக அரசின் முடிவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும் ரூ.2000 வழங்குவது சரியானது தான். அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
