Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவைவிட தமிழகம் 2 மடங்கு அசுர வளச்சி... ஏறுமுகத்தில் எடப்பாடி அரசு..!

கடந்த 3 ஆண்டுகளாகவே இந்தியாவின் தேசிய சராசரியை விட அதிகமான வளர்ச்சி வீதத்தை [GSDP]கொண்டிருந்த தமிழ்நாடு 2019-2020 வரையிலான நிதியாண்டில் இருமடங்கு அதிகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
 

Tamil nadu clocks higher growth rate for third consecutive year
Author
Tamil Nadu, First Published Aug 8, 2020, 10:53 AM IST

கடந்த 3 ஆண்டுகளாகவே இந்தியாவின் தேசிய சராசரியை விட அதிகமான வளர்ச்சி வீதத்தை [GSDP]கொண்டிருந்த தமிழ்நாடு 2019-2020 வரையிலான நிதியாண்டில் இருமடங்கு அதிகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கொரோனா தொற்றால் உலகமே பொருளாதார மந்த நிலையில் தவிக்கும் நேரத்திலும், இந்திய அளவில் மூன்றாவது ஆண்டாகப் பொருளாதார முன்னேற்றத்தை அடைந்து தமிழகம் சாதனை படைத்துள்ளது. 2019-2020ஆம் ஆண்டில், தேசிய சராசரி விகிதத்தை விடத் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு சராசரி எண்ணிக்கை 4.2 ஆக இருந்தது. ஆனால் தமிழகத்தின் செயல்திறன் 8.03 சதவிகிதமாக எனப் பதிவாகியுள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் தேசிய சராசரி எண்ணிக்கையைவிட தமிழகத்தின் செயல்திறன் இரண்டு மடங்கு அதிகம்.Tamil nadu clocks higher growth rate for third consecutive year

கடந்த 2018-19 ஆம் ஆண்டில், தமிழகம் 12வது இடத்திலிருந்த நிலையில், தற்போது அகில இந்திய அளவில் தமிழகம் 6வது இடத்தில் உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது அதை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. தமிழக அரசின் தொடர் நடவடிக்கையின் காரணமாகப் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் மத்திய அரசு நடத்திய ஆய்வின் அடிப்படையில் வெளியான புள்ளி விவரங்கள் அடிப்படையில் தெரியவந்துள்ளது. 

இதற்கிடையே கொரோனா காரணமாக நாடு முழுவதும் கடும் பொருளாதார மந்தநிலை நிலவும் நேரத்தில், தமிழக அரசின் சரியான திட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் காரணமாகத் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள். மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தொழில்துறை உற்பத்தியின் பங்கு மிகவும் முக்கியமானது, மாநிலத்தின் உற்பத்தி மதிப்பை உயர்த்துவதற்காகவெ தமிழகத்தில் அதிக அளவில் முதலீடுகள் ஈர்க்கபட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல், மே , ஜூன் மாதங்களில் அதிக அளவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாதங்களில் மட்டும் ரூ18,236 கோடிக்கான முதலீடுகளை தமிழகம் பெற்றுள்ளது.

 Tamil nadu clocks higher growth rate for third consecutive year

பல்வெறு புதிய வெளிநாட்டு நிறுவனங்கல் தமிழகத்தில் தொழில் தொடங்குவதன் மூலம் பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி சிறிய நிறுவனங்களும் தொழில் தொடங்க உள்ளன. 2015-2019ம் ஆண்டுகளில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடுகள், முதல்வரின் வெளிநாட்டு பயணங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்பந்தங்களில் மேலும் பல நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை தொடங்கும் பட்சத்தில் உற்பத்தி மதிப்பு உயர்ந்து அதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மேலும் உயரும். 

Follow Us:
Download App:
  • android
  • ios