Breaking news: தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி... அறிவித்தது தேர்தல் ஆணையம்..!
தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்தார்.
தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்தார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் சட்டசபைகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வருகிறது.
அப்போது பேசிய அவர், கொரோனா உச்சத்தில் இருந்த 2020ம் ஆண்டே தேர்தலை நடத்தி இருந்தோம். கொரோனாவில் இருந்து மீண்டு வரும் ஆண்டாக 2021ம் ஆண்டு உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜனவரிம் அமாதம் முதலே தேர்தல் நடத்துவது தொடர்பாக ஏற்பாடுகளை தொடங்கி கண்காணித்து வருகிறோம். தேர்தக் ஆணைய சிறப்பு அதிகாரி உமேஷ் சின்ஹா தமிழகத்தில் கண்காணித்து வந்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறும். வேட்புமனு தாக்க மார்ச் 12ம் தேதி. வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் மார்ச் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் பரிசீலனை மார்ச் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் திரும்பபெற மார்ச் 22ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. ’’ என அவர் தெரிவித்தார்.