Asianet News TamilAsianet News Tamil

தீர்ப்புக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை.. 17 வயது சிறுமியை கற்பழித்தவர் எடுத்த பயங்கர முடிவு..

புதுக்கோட்டை மாவட்டம்  கரடி குளத்தை சேர்ந்த்வர் திருநாவுக்கரசு,  இவருக்கு  போக்சோ சட்டத்தின் கீழ் மகிளா நீதிமன்றத்தில்   தீர்ப்பு அளிக்கப்படுகிறது என்பதை அறிந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல்  விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

 

Suicide by hanging for fear of verdict .. Terrible decision taken by the rapist of a 17 year old girl ..
Author
Chennai, First Published Feb 5, 2021, 12:05 PM IST

புதுக்கோட்டை மாவட்டம்  கரடி குளத்தை சேர்ந்த்வர் திருநாவுக்கரசு,  இவருக்கு  போக்சோ சட்டத்தின் கீழ் மகிளா நீதிமன்றத்தில்   தீர்ப்பு அளிக்கப்படுகிறது என்பதை அறிந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல்  விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் கரடி குளத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் விவசாயி.திருநாவுக்கரசு கடந்து 2019ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின்  பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் போஸ்கோ சட்டத்தின் கீழ் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார். 

Suicide by hanging for fear of verdict .. Terrible decision taken by the rapist of a 17 year old girl ..

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.திருநாவுக்கரசு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார் இந்நிலையில் அந்த வழக்கில் திருநாவுக்கரசுக்கு  தீர்ப்பு கொடுப்பதாக இருந்தது. இதனை அறிந்த திருநாவுக்கரசு தனக்கு தண்டனை கிடைத்து விடும் என்ற அச்சத்தில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.இதனால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநாவுக்கரசு பரம்பூர் டாஸ்மார்க் கடை அருகே மதுவுடன் விஷத்தை கலந்து பருகி தற்கொலை செய்து கொண்டார். இவர் கோர்ட்டுக்கு ஆஜராகாததால் காவல்துறையினர் அவரது வீட்டிற்கு தொடர்பு கொண்டனர், இதனைத் தொடர்ந்து திருநாவுக்கரசின் சகோதரர்கள் புதுக்கோட்டை மகிளா  நீதிமன்றத்திற்கு வந்தபோது தான் அவர்களுக்கு திருநாவுக்கரசு தற்கொலை செய்து கொண்ட செய்தி தெரியவந்தது. 

Suicide by hanging for fear of verdict .. Terrible decision taken by the rapist of a 17 year old girl ..

இதனைத் தொடர்ந்து திருநாவுக்கரசு சகோதரர்கள் சாலையில் விழுந்து புரண்டு அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.போக்சோ சட்டத்தின் கீழ் தனக்கு சிறை தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தில் திருநாவுக்கரசு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios