ஓ.பன்னீர்செல்வம் மீது ஊழல் வழக்கு: சு.சாமி ரெடி! ஓ.கே. செல்வாரா மோடி?
. ஜஸ்ட் ரெண்டு வரியை அனுப்பினாலும் கூட ரெண்டு கோடி ஓட்டுகள் விழும் காலம் இது.
ஹைடெக்காக சுருங்கிவிட்ட அரசியல் சூழ்நிலையை ரெண்டே வரிகளில் விளக்கலாம் இப்படி...
* குஜராத்தில் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காத வெற்றி, ஆர்.கே.நகரில் நோட்டாவை விட பின் தங்கிய நிலை ஆகியவற்றால் ‘மக்கள் நம்மை வெறுக்கிறார்களா?’ எனும் பதத்தை தங்களுக்குள் விவாதிக்க துவங்கியுள்ளது பி.ஜே.பி.
* சுயேட்சை வேட்பாளரான தினகரன் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளரை விட குறைவாகத்தான் செலவு செய்ய வேண்டும். ஆனால் ஆர்.கே.நகரில் அவர் அதிகம் செலவழித்திருக்கிறார். இதை வைத்தே அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க வைப்போம்! எனும் மூவ்வை எடுத்துள்ளதாம் பழனி - பன்னீர் அணி.
* டிசம்பர் 31-ம் தேதியான இன்று தனது அரசியல் முடிவை தெளிவாக அறிவிக்கும்படி ரஜினியிடம் வலுவாக கோரியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.
* ’டெப்பாசிட்டை இழந்த தி.மு.க. தன்னை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கணும்.’ அப்படின்னு திருநாவுக்கரசர் சொன்னதை மிக கடுமையாக எடுத்துக் கொண்டிருக்கிறது தி.மு.க.
* 2ஜி தீர்ப்புக்குப் பின் கனிமொழியின் நிலை தி.மு.க.வில் பெரியளவில் மாறியிருக்கிறது. அவரது வீட்டில் தினமும் பெரிய அளவில் ஆதரவாளர்கள் குவிகிறார்கள்.
* அநேகமாக தி.மு.க.வில் சில மாவட்டங்களில் செயலாளர்கள் மாற்றம் அதிரடியாய் அரங்கேறும் என தெரிகிறது.
* ஓ.பன்னீர்செல்வத்தின் மீது ஊழல் வழக்கு தொடர்வதற்கான ஆவணங்களை சுப்பிரமணியன் சாமி சேகரித்து வைத்திருக்கிறாராம். பிரதமர் ஓ.கே. செய்தால் ஆட்டம் ஆரம்பமாகுமாம்.
* ’ஆண்மையில்லாதவர்கள்’ எனும் ஆடிட்டர் குருமூர்த்தியின் வாய்ஸை பி.ஜே.பி. தலைமையின் வாய்ஸாகவே பார்க்கிறது அ.தி.மு.க.
* எடப்பாடி அணியிலிருந்து 9 எம்.எல்.ஏ.க்களை இழுத்துவிட்டால் ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என திட்டம் போடுகிறதாம் தினகரன் டீம்.
* தமிழகத்தின் பார்வையாளர்களாக, பொறுப்பாளர்களாக இருக்கும் பா.ஜ.க.வின் முக்கிய புள்ளிகள் எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோரின் மக்கள் செல்வாக்கு குறித்த நெகடீவ் தகவல்களை அமித்ஷாவிடம் தந்துள்ளனராம்.
- விஷ்ணு பிரியா