சுற்றுலா தளமாக்கப்படும் மோடி டீ விற்ற இடம்... ஏழை மகனுக்கு புகழாரம்..!
பிரதமர் நரேந்திர மோடி தேநீர் விற்ற இடம் சுற்றுலா இடமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தேநீர் விற்ற இடம் சுற்றுலா இடமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மோடி இளம் வயதில் தேனீர் விற்றதாக அவரே கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் தேநீர் விற்க பயன்படுத்திய இடம் ஒரு சுற்றுலா இடமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத்தில் உள்ள வாட்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்பனை செய்து வந்தார். கடந்த காலங்களில் அவர் கணிசமான நேரத்தை செலவிட்ட ஸ்டாலை ஒரு சுற்றுலா இடமாக மாற்ற மாநில அரசு இப்போது முடிவு செய்துள்ளது.
அதனை மாற்றாமல் இந்த ஸ்டாலை ஒரு சுற்றுலாத் தலமாக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மாநில சுற்றுலா அமைச்சர் பிரஹ்லாத் படேல் ஏற்கனவே இந்த ஸ்டாலை ஆய்வு செய்துள்ளார், அந்த ஸ்டாலை பாதுகாக்க கண்ணாடியால் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிகளை தாக்கும் போது தேநீர் விற்கும் நாட்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். "எனது மோசமான தோற்றம் காரணமாக காங்கிரஸ் என்னை விரும்பவில்லை. ஒரு கட்சி இவ்வளவு தாழ்ந்திருக்க முடியுமா? ஆம், ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராகிவிட்டார். இந்த உண்மையை அவர்கள் அவமதிப்பை மறைக்கத் தவறவில்லை. ஆம், நான் தேநீர் விற்றேன் ஆனால் தேசத்தை விற்கும் பாவத்தை நான் செய்யவில்லை," என்று ஏற்கெனவே அவர் கூறியுள்ளார்.