Asianet News TamilAsianet News Tamil

எலக்ஷன் வந்ததுக்கு அப்புறம் தான் மோடிக்கு தமிழ்நாடே கண்ணுக்கு தெரியுது… வெளுத்து வாங்கிய ஸ்டாலின் !!

தேர்தல் வந்தால் மட்டுமே தமிழகம் வரும்  பிரதமர் நரேந்திர மோடி,தேர்தல் முடிந்தால் இந்தியாவில் இருக்க மாட்டார். என்று திமக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

stalin in aarani
Author
Arani, First Published Apr 6, 2019, 11:45 PM IST

17 ஆவது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஆரணி  தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். 

stalin in aarani

அப்போது பேசிய ஸ்டாலின் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் தபால் வாக்குகளை திமுக கூட்டணிக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ராகுல்காந்தி அறிவித்துள்ள ஏழைகளுக்கு மாதம் ரூ.6000 உதவித்திட்டத்திற்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது என பாராட்டினார்..

stalin in aarani
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென்று நாட்டு பாதுகாப்பு மீது அக்கறை வந்துள்ளது. தேர்தலுக்கு முன் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு இருந்தவர்கள் தற்போது தேர்தலுக்காக கூட்டணி சேர்ந்து உள்ளனர் என ஸ்டாலின் குற்றம்சாட்டினார்..

stalin in aarani

தேர்தல் வந்தால் மட்டுமே தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. தேர்தல் முடிந்தால் இந்தியாவில் இருக்க மாட்டார் என்று வெளுத்து வாங்கிய மோடி . வாக்குறுதி அளித்த படி ஒவ்வொருவர் வங்கிக்கணிக்கிலும் மோடி ரூ.15 லட்சம் செலுத்தி உள்ளாரா என கேள்வி எழுப்பினார். 

பொய் வாக்குறுதிகளை அளிப்பதையே வாடிக்கையாக கொண்டவர் பிரதமர் மோடி என்றும்
ராகுல்காந்தி வெளியிட்டுள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் நரேந்திர மோடி அதிர்ச்சியில் உள்ளார் என கூறினார்.

stalin in aarani

தமிழகத்திற்கு மீண்டும் பல நலத்திட்டங்கள் கிடைத்திட மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும். காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது திமுக ஆட்சியின் சாதனை என மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தமிழக மக்கள் தங்கள் கோபத்தை காட்ட வேண்டிய நாள் தான் ஏப்.18-ம் தேதி. மக்கள் உணர்வுகளை பார்க்கும் போது 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆரணி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்துக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios