கோடு போட்ட சட்டையுடன் ஸ்டாலின்..! நேரில் வந்து வாழ்த்து கூறிய விஐபி..!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை ஆழ்வார்பேட்டை இல்லத்தில், ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் நேரில் சென்று சந்தித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது, கலைஞர் அவர்களின் மறைவு குறித்தும் கேட்டறிந்தார். மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தன்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.

இவர்களின் சந்திப்பின் போது திமுக தலைவர் ஸ்டாலின் கொடு போட்ட சட்டை அணிந்து இயல்பாக வீட்டில் அமர்ந்து பேசிய ஒரு தருணத்தை விளக்கும் வகையில் உள்ளது . 

எப்போதும் வெள்ளை நிற ஆடையில், அரசியல்வாதிகளுக்கே உண்டான ஒரு அடையாளமாக இருப்பார். ஆனால் நீண்ட நாட்களுக்கு பின், ஸ்டாலின் அவர்களின் கொடு போட்ட சட்டை அணிந்த இந்த போட்டோ, மக்கள் மத்தியில் சிறிய கவனத்தை ஈர்த்துள்ளது.