Asianet News TamilAsianet News Tamil

சமூக நீதியால் ஓட்டு… பின் சமூக நீதிக்கே வேட்டு... திமுகவை டார் டாராக கிழித்த அண்ணாமலை.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சுமார் 100 குடும்பத்தைச் சேர்ந்த நரிக்குறவ இனத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுப்பதற்காக மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வந்திருக்கிறார்கள்

 social justice only for vote.. not real social justice... Annamalai  criticized DMK
Author
Chennai, First Published Jun 28, 2022, 8:02 PM IST

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சுமார் 100 குடும்பத்தைச் சேர்ந்த நரிக்குறவ இனத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுப்பதற்காக மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வந்திருக்கிறார்கள் மற்றவர்களுக்கெல்லாம் இருக்கைகள் கொடுத்து அமரச் சொன்ன அதிகாரிகள் நரிக்குறவ இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இருக்கை கொடுக்காமல் தரையில் அமர சொல்லி இருக்கிறார்கள். பெண்கள் கைக்குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து இருக்கிறார்கள் அரசு அலுவலகத்தில் கடைபிடிக்கப்பட்ட இந்த பாகுபாடு, திராவிட மாடல் என்று சொல்லிக் கொள்ளும் ஆளும் கட்சியின் சமூகநீதிக் கோட்பாட்டை கேள்விக்குறியாக உள்ளது. 

இதையும் படியுங்கள்:  ஓட்டல் அறையில் நடிகை பலாத்காரம்.. நடிகருக்கு ஆண்மை பரிசோதனை.. போலீஸ் அதிரடி.

சாதிகள் அழிக்கப்பட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் திராவிட மண்ணில் காட்டப்பட்ட இந்த சாதிப் பாகுபாடும் சாதிக் கூத்தும் திமுகவின் போலி முகத்தை தோலுரித்துக் காட்டுகிறது. நரிக்குறவர் வீட்டிற்கு வந்திருப்பவர் அங்கிருக்கும் புத்தம்புது தட்டிலே எடுத்துவரப்பட்ட புத்தம் புதிய டம்ளரில் மினரல் வாட்டர் குடித்து திடீரென்று நுழைந்த வீட்டில் திறமையாக போட்டோ படமெடுத்து நரிக்குறவர் வீட்டில் உணவருந்திய விளம்பரப்படுத்திக் கொள்கிறார். சமூக் நீதியை விளம்பரத்திற்கு மட்டுமே பயன்படுவது தான் இவர்களின் சமூக நீதி. இவர்களின் உள்ளத்தில் இருக்கும் உண்மையான சமூக நீதி, இவர்கள் ஆட்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிகழ்த்திக் காட்டப்பட்டிருக்கிறது. 

 social justice only for vote.. not real social justice... Annamalai  criticized DMK

வார்த்தைக்கு வார்த்தை சமூக நீதியையும் சாதி மறுப்பையும் வார்த்தெடுத்த மண் தமிழ் மன்னன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் திராவிட மாடல் ஆட்சியில், பழங்குடியின மக்களுக்கு ஒரு சாதா நாற்காலியை தரக் கூட இவர்களுக்கு மனமில்லை. ஆனால் தன்னை சமூகநீதிக் காவலர் ஆக அடையாளப்படுத்தாத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பழங்குடி இனத்தின் மலைசாதி மங்கைக்கு, சாதாரண நாற்காலி அல்ல ஜனாதிபதியின் நாற்காலியையே தந்து கௌரவப்படுத்தி இருக்கிறார். இப்போது சொல்லுங்கள்  திராவிட மாடலில் உதட்டில் மின்னுகிறது சமூக நீதி... பாஜகவினருக்கு உள்ளத்தில் விதைக்கப்பட்டிருக்கிறது சமூகநீதி... இது ஏதோ முதல்முறை தெரியாமல் நடந்த சம்பவமாக நான் கருதவில்லை. 

இதையும் படியுங்கள்: ஐக்கிய அரபு அமீரகம் சென்றார் பிரதமர் மோடி... அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வரவேற்பு!!

கடந்த ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பொன்னம்பலம் கிராமத்தில் மழையால் சேதமடைந்த தடுப்பணைகளை பார்வையிடுவதற்காக திமுக எம்எல்ஏ விஸ்வநாதன் இருந்தார் பாதையில் சேறும் சகதியும் இருந்ததால் தன் செருப்பை கழற்றி விட்டு எம்எல்ஏ நடக்க, தலித் சமுதாயத்தைச் சேர்ந்த வெங்கடசமுத்திரம் ஊராட்சி திமுக செயலாளர் சங்கர் எம்எல்ஏ செருப்பை தூக்கிச் சென்றார். அங்கே தெரிந்தது சமூக நீதி…!!!

 social justice only for vote.. not real social justice... Annamalai  criticized DMK

கடந்த மார்ச் மதம் முதுகுளத்தூர் BDO  ராஜேந்திரன் என்பவரை அவரின் சாதியை சொல்லி தரக்குறைவாக திட்டியதாக வந்த புகாரை அடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பன்க்கு இலாகா மட்டும் மாற்றம் செய்யப்பட்டது. பட்டியல் இன மக்களை அவமரியாதை செய்த அமைச்சர் மீது எந்த சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கே தெரிந்தது சமூக நீதி…!!!

இதே அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களின்  பிறந்தநாளன்று சந்திக்கச் சென்ற விசிக தலைவர் தொல் திருமாவளவன் அவர்களை, தான் சொகுசு சோபாவில் அமர்ந்திருந்தும், விசிக தலைவரை பிளாஸ்டிக் நாற்காலியில் அமரச் செய்தது, சமூக ஊடகத்தில் பெருத்த சர்ச்சையானது. அங்கே தெரிந்தது சமூக நீதி…!!!

 social justice only for vote.. not real social justice... Annamalai  criticized DMK

ஜூலை 2021 சாக்கோட்டை அன்பழகனின் சந்திக்கச் சென்ற விசிக தலைவர் திருமாவளவன் சாதாரண பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைக்கப்பட்டு இருந்தார். ஆனால் எம்எல்ஏ சொகுசு நாற்காலியில் அமர்ந்திருந்தார் அங்கே தெரிந்தது சமூக நீதி…!!! ஏன் இன்றும் கூட முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் யஸ்வந்த் சின்ஹா அவர்களுக்கு மனு தாக்கல் செய்யச் சென்றிருந்த விசிக தலைவர் தொல் திருமாவளவன் அவர்களை இருக்கைக்கு கூட இடமளிக்காமல் பின்னர் கடைசியாக நிற்க வைத்தது, சமூக ஊடகத்தில் வைரலாகிறது. 

அங்கே தெரிந்தது சமூக நீதி…!!! திராவிட மாடலில் எப்படி தமிழ் மொழி அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுகிறதோ? அதேபோல சமூக நீதியும் ஓட்டுகளையும் வாங்குவதற்கு பயன்படும் நல்ல கருவியாக திமுகவுக்கு பயனளிக்கிறது சாதியைப் பற்றியும், மதங்களைப் பற்றியும், சமூகநீதி பற்றியும், அதிகம் பேசும் திராவிட மாடல் போலியானது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios