Asianet News TamilAsianet News Tamil

ஜெ. மரணம் பற்றி ஓ.பி.எஸ்.-ஐ விசாரித்தால் போதுமே....! திண்டுக்கல் ஐ.லியோனி

Should Investigate O.Pannerselvam on jaya death - I. Leone
Should Investigate O.Pannerselvam on jaya death - I. Leone
Author
First Published Jun 26, 2018, 1:00 PM IST


திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் கூட்டம் தேனி, பெரிய குளத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக நட்சத்திர பேச்சாளர்
திண்டுக்கல் ஐ. லியோனி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., தலைமையில் நம்பிக்கையில்லாத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கல்லாப்பெட்டி பழனிசாமியாகவும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெருக்கூத்து பன்னீர்செல்வமாகவும் சகல இடங்களுக்கும் தகுந்தவாறு வேடமணிந்து நடித்து கொண்டிருக்கின்றனர்.

Should Investigate O.Pannerselvam on jaya death - I. Leone

இன்ஸ்பெக்டராக இருந்த பன்னீர்செல்வம் கான்ஸ்டபிளாகவும், கான்ஸ்டபிளாக இருந்த எடப்பாடி இன்ஸ்பெக்டராகவும் ஆனதுபோல் பதவி மாறி உள்ளனர்.
எத்தனை நாளைக்கு இந்த ஆட்சி என்று பயந்து கொண்டே ஆட்சி நடத்தி வருகின்றனர்.

Should Investigate O.Pannerselvam on jaya death - I. Leone

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணையில், வேறு யாரையும் விசாரிக்காமல், ஓ.பன்னீர்செல்வத்தை மட்டும்
விசாரித்தார் ஜெ. மரணம் குறித்த விபரம் தெரியவரும் என்றார்.

Should Investigate O.Pannerselvam on jaya death - I. Leone

ஏனென்றால் அப்போது முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம்தான். அவருக்கு தெரியாமல் எந்தவொரு சிகிச்சையும் நடந்திருக்காது. எனவே அவர் ஒருவரை விசாரித்தால் அனைத்து உண்மைகளும் வெளிவரும் என்று கூறினார்.

Should Investigate O.Pannerselvam on jaya death - I. Leone

சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை என்று கூறி 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டு, அதில் 3 ஆயிரம் கோடி கமிஷன் பெறுவதற்காக, ஏழை
விவசாயிகள் வயிற்றில் எடப்பாடி பழனிசாமி அடித்துக் கொண்டிருக்கிறார் என்றும் மக்களுக்கு எதிராக தீட்டப்படுகின்ற எந்தவொரு திட்டங்களையும்
செயல்படுத்தக் கூடாது என்றும் ஐ.லியோனி கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios