sensational political bit news
உலகின் தலை சிறந்த சொல் ‘செயல்’தான். ஆனால் செயலுக்கு இணையாக ‘சொல்’ல்லுக்கும் வலுவான விளைவுகள் உண்டு. அதிலும் அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் சொல்லும் ஏகோபித்த பின் விளைவுகள் அநேகம் உள்ளன. அதை டீல் செய்யும் பகுதிதான் இது...
.jpg)
* இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள் பதவிக்காக தங்களின் சுயமரியாதையை மட்டுமல்ல, தமிழகத்தின் சுயமரியாதையையும் அடமானம் வைத்துவிட்டனர்.
- ஸ்டாலின்
* காங்கிரஸ் கட்சியில் இருந்து என்னை சஸ்பெண்ட் செய்துள்ளனர். எந்தளவுக்கு என்னை காங்கிரஸிலிருந்து விலக்கி வைக்கின்றனரோ அந்தளவுக்கு நான் காங்கிரஸோடு ஒட்டியே இருக்கிறேன். நான் உண்மையான காங்கிரஸ்காரன்.
- மணிசங்கர் ஐயர்
.jpg)
* ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 29 வகையான கைவினைப் பொருட்களுக்கான வரியை மொத்தமாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- அருண் ஜெட்லி
.jpg)
* ரஜினி மற்றும் கமல் இருவரும் எப்படி அரசியல் பயணம் செய்தாலும் பரவாயில்லை. ஆனால் எங்களின் பயணம் மக்களை நோக்கித்தான் இருக்கும். அதுதான் சேவை அரசியல்.
- ஜெயக்குமார்
* ஜெயலலிதாவின் மரணம் குறித்த கருத்துக்களை வெளியிடுவது மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் இதை ஆராய்ந்து ஜெ., மரணம் குறித்த உண்மைகளை தெரிவிக்க வேண்டும்.
- திருநாவுக்கரசர்.
.jpg)
* நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன். என்னை இந்த முடிவுக்கு தள்ளியவர்களுக்கு நன்றி. அடுத்த சட்டசபை தேர்தலில் பெரிய மாற்றங்கள் இருக்கும்.
- விஷால்
* மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்த பிறகு மாநிலங்களின் உரிமை பறிபோய்க் கொண்டிருக்கிறது. டில்லி, புதுவையில் இரட்டை நிர்வாக குழப்பங்களை நிகழ்த்துவது போல் தமிழகத்திலும் இதே வேலையை காட்டுகின்றனர்.
- தமீமுன் அன்சாரி
.jpg)
* தி.மு.க. கடவுள் மறுப்பு கொள்கையை கொண்ட கட்சி அல்ல. கடவுள் ஒருவரே என்பதுதான் எங்களது கொள்கை.
- கனிமொழி
* என் பெற்றோர் சிறு வயதிலிருந்தே என்னை நேர்மையாக வளர்த்துவிட்டனர். ஆனால் இந்த இரண்டரை ஆண்டு ஆட்சியில் என்னால் நேர்மையாக செயல்பட முடியவில்லை. எனவே அரசியலில் இருந்து ஒதுங்கி மீண்டும் சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்த போகிறேன்.
- கருணாஸ்.
.jpg)
* மருத்துவ மேற்படிப்புக்காக டில்லி செல்லும் தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதுவரை இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும்.
- வைகோ
