Asianet News TamilAsianet News Tamil

" ஈழ தமிழர்களை ஏமாற்றி பிழைக்கும் சீமானே" அடங்கு இல்லனா அடக்கப்படுவாய்.. போஸ்டர் ஒட்டி எச்சரித்த திமுக.

அதில், நாம் தமிழர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் சீமான்.. வெறி நாயே.. திமுக தொண்டர்கள் மனது புண்படும்படி மேடையில் செருப்பை காட்டிய அரசியல் நாகரீகம் தெரியாத சீமான் நாயே.. அடங்கு இல்லையேல் அடைக்கப்படுவாய் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

Seeman who deceives and survives Eelam Tamils" you will be suppressed.. DMK warned by the poster.
Author
Chennai, First Published Dec 22, 2021, 1:09 PM IST

"ஈழத் தமிழர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் சீமானே" அடங்கு இல்லையென்றால் அடக்கப் படுவாய் என எச்சரித்து ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தொண்டி பேரூர் திமுகவினர் போஸ்டர் ஒட்டி உள்ளதும், அந்தப் போஸ்டருக்கு பக்கத்திலேயே "தொண்டி நகர திமுக சங்குகளுக்கு எச்சரிக்கை" சீமானை பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது என நாம் தமிழர் கட்சி சார்பில் பதிலுக்கு போஸ்டர் ஒட்டப்பட் டுள்ளதும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேடையில் திமுகவை எச்சரித்து சீமான் செருப்பை காட்டிய நிலையில் இவ்வாறு நடந்துள்ளது. 

தமிழ் திரையுலகில் திரைப்பட இயக்குனராக அடியெடுத்து வைத்த சீமான்.. தம்பி என்ற திரைப்படத்தின் மூலம்  தமிழக மக்களுக்கு நெருக்கமானார். இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது, அதை தடுக்க வேண்டுமென குரல் கொடுத்து வந்த அவர், ஒரு கட்டத்தில் ஆதித்தனார் நிறுவிய நாம் தமிழர் கட்சிக்கு தலைமை ஏற்று அரசியல் கட்சி தலைவராக உருவெடுத்தார். தமிழர்களுக்கு விடிவு கிடைக்க வேண்டுமெனில்.. தமிழ்நாட்டை தமிழர் ஆளவேண்டும். தமிழகத்தில் நாம் தமிழர் ஆட்சி மலர்ந்தாள் இலங்கையில் ஈழம் மலரும் என்ற கோஷத்துடன் அரசியல் நடித்துவருகிறார் சீமான். தமிழகத்தில் எவர் வேண்டுமானாலும் வாழலாம், ஆனால் தமிழகத்தை தமிழன் மட்டும் தான் ஆள்வோம் என்று மேடைகளில் நெஞ்சுவிடைக்க பேசியும் வருகிறார் அவர். தமிழக முதல்வராகவேண்டும் என்ற தீராத ஆசையுடன் அரசியல் பேசும் சீமான். பெருமளவில் பிறமொழி பேசுபவர்கள் மீதான வெறுப்பை உமிழும் வகையில் அவரது பேச்சுக்கள் இருந்து வருகிறது. 

Seeman who deceives and survives Eelam Tamils" you will be suppressed.. DMK warned by the poster.

நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் குற்றம் செய்தவர்களுக்கு "பச்சை  மட்டையால் அடி கொடுக்கப்படும்"  வேற்றுமொழி பேசுபவர்கள் எங்களுக்கு இங்கு அடங்கித்தான் வாழவேண்டும் என்பது போன்ற அவர்களின் பேச்சுக்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. தமிழ் தேசியம் பேசும் அதே நேரத்தில் அவர்  இனத் தூய்மைவாதம் பேசுகிறார் என்றும், இது ஒருவகையான பாசிசம் என்று பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் தமிழ் தேசியம், தமிழர் விடுதலை என பேசி வந்த சீமான் தமிழர் மதம், தமிழர் குடி என மதவாதத்தையும், சாதி வாதத்தையும் தூக்கிப் பிடிக்கும் வகையில் பேசி வருகிறார். தமிழர்கள் எல்லோரும் தாய் மதமான சைவ மதத்திற்கு திரும்ப வேண்டும், கிருத்துவமும் இஸ்லாமும் அந்நிய மதம் என அவர் சமீபத்தில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

குறிப்பாக அவரது பேச்சுகள் பாஜகவுக்கு ஒத்து ஊதுவது போல இருக்கிறது என்றும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை வேறு வழியில் தமிழகத்தில் புகுத்த பார்க்கிறார் என்றும், சீமான் பாஜகவின் B-Team என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறார். தமிழ் தேசியம் என்ற போர்வையில் ஆர்எஸ்எஸ்சின் அடியாளாக சீமான் செயல்படுகிறார் என்றும், அவர் தமிழ் தேசியம் பேசும் சங்கி என்றும் அவரை விமர்சித்து வருகின்றனர். அதேபோல் திராவிட கட்சிகள் நாட்டை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டது என்று பேசும் அவர், திமுகவை  மட்டும் குறிவைத்து அக்காட்சியும், அக்கட்சியின் தலைவர்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார். திராவிட கட்சி என்றால் திமுக மட்டும்தானா? அதிமுக இல்லையா? அதிமுக என்றால் அடக்கி வாசிப்பதும், திமுக என்றால் ஏரி அடிப்பதும் தான் சீமானின் திராவிட எதிர்ப்பா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Seeman who deceives and survives Eelam Tamils" you will be suppressed.. DMK warned by the poster.

கேடி ராகவன் வீடியே விவகாரத்தில் கேடி.ராகவனுக்கு ஆதரவாக பேசியது, ஜெய்பீம் விவகாரத்தில் சூர்யாவுக்கு எதிர்ப்பாக பேசியது, பாஜகவின் தாய்மதம் திரும்புத்தல் என்பதைப் போன்றே, தமிழர்களின் தாய் மதமான சைவத்திற்கு திரும்புங்கள் என்று பேசியது சீமானின் அரசியல் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அவரின் இந்த நவடிக்கைகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சீமான் பாஜகவின் பி டீம்தான். அவர் முழு சங்கிதான் என்றும் அவரை விமர்சித்து வருகின்றனர். சீமான் யாரை ஆதரிக்கிறார், யாரை எதிர்க்கிறார், யாருடன் சமரசம் செய்கிறார் என்று அவரது அரசியல் பிடிபடாத அரசியலாகவே சமீபகாலமாக  இருந்து வருவதே இந்த விமர்சனத்திற்கு காரணமாகவும் உள்ளது என்று சொல்லலாம். நடிகை விஜயலட்சுமி வீடியோ மேல் வீடியோ போட்டு சீமான் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக கேள்வி எழுப்பி வருவது. கேடி ராகவன் வீடியோவுக்கு முட்டுக்கொடுத்து, மாரிதாஸ் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தது பொன்றவை சீமானுக்கு எதிர்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

சமீப காலமாக அவர் கொடுக்கும் பேட்டிகளில் நியாயம் அநியாயத்தையும் தாண்டி, சரி தவறு நியதியை தாண்டி ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு எதிராக மட்டும் கருத்தை  முன்வைப்பதில் சீமான் குறியாக இருந்து வருகிறார் என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. சென்னையில் நடந்த கூட்டத்தில் யாரைப் பார்த்து சங்கி என்கிறீர்கள் நீங்கள் தான் சங்கிகள் என சீமான் திடீரென தன் காலில் இருந்த செருப்பை கழட்டி செருப்பால் அடிப்பேன் என அரசியல் நாகரீகம் கொஞ்சமும் இன்றி செருப்பைத் தூக்கிக் காட்டினார். இது திமுக நிர்வாகிகளை கொந்தளிப்படைய செய்துள்ளது.  இதன் எதிரொலியாக சீமானை சமூகவலைதளத்தில் ஆபாசமாக திட்டி தீர்த்து வருகின்றனர். சீமான் எங்கெல்லாம் கூட்டம் போடுக்கிறாரோ அங்கெல்லாம் செருப்பு வீசப்படும் என்று சிலர் அதில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதி

Seeman who deceives and survives Eelam Tamils" you will be suppressed.. DMK warned by the poster.

மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியினர், இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுதலையை வலியுறுத்தி  பொதுக்கூட்டம் நடத்தினர். அப்போது நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் என்பவர் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது முதல்வரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் மேடையில் ஏறி மரியாதையாக பேசுங்கள் என நாம் தமிழர் தம்பிகளை எச்சரித்ததுடன், மேடையிலிருந்த மைக்செட் உள்ளிட்டவற்றை கீழே தள்ளி அதகளம் செய்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருதரப்பினரையும் விலக்கி அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கானா வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதே வரிசையில் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தொண்டி பேரூர் திமுகழகம் சார்பில் சீமானை எதிர்த்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

Seeman who deceives and survives Eelam Tamils" you will be suppressed.. DMK warned by the poster.

அதில், நாம் தமிழர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் சீமான்.. வெறி நாயே.. திமுக தொண்டர்கள் மனது புண்படும்படி மேடையில் செருப்பை காட்டிய அரசியல் நாகரீகம் தெரியாத சீமான் நாயே.. அடங்கு இல்லையேல் அடைக்கப்படுவாய் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அந்தப் போஸ்டருக்கு கீழே நாம் தமிழர் கட்சியினரும் ஒரு எச்சரிக்கை போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், தொண்டி நகர் திமுக சங்குகளுக்கு எச்சரிக்கை..  அன்னை தமிழினத்தை அழித்தொழித்த கயவர் கூட்டமே.. சீமானை பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது. நாங்கள் வாய்ச்சொல் வீரர்கள் அல்ல என்று எச்சரிக்கும் வகையில் அதில் ஒட்டப்பட்டுள்ளது. சீமான் செருப்பைத் தூக்கி காட்டிய விவகாரம் போஸ்டர் மோதல் முதல், கைகலப்பு வரை வந்திருக்கிறது.. இது இத்துடன் முடியுமா தொடருமா என்பதைபொறுத்திருந்து பார்ப்போம். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios